சொல்லகராதிச் சுருக்கம்

9. சேதிராயர் திருவிசைப்பா

28. கோயில்


280.

வாணுதற் கொடி மாலது வாய்மிக
நாண மற்றனள் நான்அறி யேன்இனிச்
சேணுதற் பொலி தில்லையு ளீர்உமைக்
காணில் எய்ப்பிலள் காரிகையே.                   (2)
 


280,     கொடி-  கொடிபோன்றவள்.  மிக   அற்றனள்-முழுதும்
நீங்கினாள்.  ‘‘இனி’’  என்றதன்பின்  ‘விளைவது’  என்பது வருவிக்க.
‘இனித்     தெருவில்       வந்து      உம்மைத்     தூற்றுவாள்’

என்பது  குறிப்பு. நுதல்-மாளிகைகளின் நெற்றி. ‘நுதல் சேணிற்பொலி
தில்லை’  என்க. சேண்-ஆகாயம். எய்ப்பு-மெலிவு. இலள்-இல்லாதவள்
ஆவள்.  ‘ஆதலின்,  உமது காட்சியையேனும் அவளுக்கு வழங்குதல்
வேண்டும்’ என்பது குறிப்பெச்சம்.


மேல்