9. சேதிராயர் திருவிசைப்பா
28. கோயில்
282. | விம்மி விம்மியே வெய்துயிர்த் தாளெனா உம்மை யேநினைந் தேத்தும் ;ஒன் றாகிலள் செம்ம லோர்பயில் தில்லையு ளீர்எங்கள் அம்மல் ஓதி அயர்வுறுமே. (4) |
282. வெய்து உயிர்த்து-மூச்சு வெப்பமாக விட்டு. ஆள்-என்னை ஆண்டுகொள். ஏத்தும்-துதிப்பாள். ஒன்று ஆகிலள்-ஒரு திறத்தும் ஆகாள்; ‘ஆற்றுகின்றிலள்’ என்றபடி. இதனை முற்றெச்சமாக்கி, ‘‘அயர்வுறும்’’ என்பதனோடு முடிக்க. செம்மலோர்-தலைமை உடையோர்; அந்தணர். பயில்-வாழ்கின்ற. அம் அல் ஓதி-அழகிய இருள்போலும் கூந்தலை உடைய மகள். இதனை முதற்கண்கூட்டுக. அயர்வுறும்- சோர்வாள். |