சொல்லகராதிச் சுருக்கம்

9. சேதிராயர் திருவிசைப்பா

28. கோயில்


283.

அயர்வுற் றஞ்சலி கூப்பிஅந் தோஎனை
உயஉன் கொன்றையந் தார்அரு ளாய்எனும்;
செயலுற் றார்மதில் தில்லையு ளீர்இவண்
மயலுற் றாள்என்றன் மாதிவளே.                    (5)
 


283.   பின்னிரண்டடிகளை முதலில் வைத்து, ‘‘உற்றாள்’ என்றதை
முற்றெச்சமாகக்  கொண்டு  உரைக்க. உய-உய்ய. இதன்பின், ‘கொள்ள’
என   ஒரு   சொல்  வருவிக்க.  செயல்  உற்று  ஆர்-வேலைப்பாடு
அமைந்து   நிறைந்த.   இவண்-இப்பொழுது.  மயல்-பித்து.  ‘இவட்கு
அருள்’ என்னும் குறிப்பெச்சம் இறுதியில் வருவித்து முடிக்க.


மேல்