9. சேதிராயர் திருவிசைப்பா
28. கோயில்
283. | அயர்வுற் றஞ்சலி கூப்பிஅந் தோஎனை உயஉன் கொன்றையந் தார்அரு ளாய்எனும்; செயலுற் றார்மதில் தில்லையு ளீர்இவண் மயலுற் றாள்என்றன் மாதிவளே. (5) |
283. பின்னிரண்டடிகளை முதலில் வைத்து, ‘‘உற்றாள்’ என்றதை முற்றெச்சமாகக் கொண்டு உரைக்க. உய-உய்ய. இதன்பின், ‘கொள்ள’ என ஒரு சொல் வருவிக்க. செயல் உற்று ஆர்-வேலைப்பாடு அமைந்து நிறைந்த. இவண்-இப்பொழுது. மயல்-பித்து. ‘இவட்கு அருள்’ என்னும் குறிப்பெச்சம் இறுதியில் வருவித்து முடிக்க. |