சொல்லகராதிச் சுருக்கம்

2. சேந்தனார் திருவிசைப்பா

7. திருவிடைக்கழி


75.

பரிந்தசெஞ் சுடரோ பரிதியோ மின்னோ
   பவளத்தின் குழவியோ பசும்பொன்
சொரிந்தசிந் துரமோ தூமணித் திரளோ
   சுந்தரத் தரசிது என்னத்
தெரிந்தவை திகர்வாழ் திருவிடைக் கழியில்
   திருக்குரா நீழற்கீழ் நின்ற
வரிந்தவெஞ் சிலைக்கை மைந்தனை அஞ்சொல்
   மையல்கொண் டையுறும் வகையே.               (7)
 

75.     பரிந்த - வீசுகின்ற. சுடர் - விளக்கு.  குழவி - கொழுந்து.
சிந்துரம்  -  செந்நிறப்  பொடி. மணி -மாணிக்கம்  சுந்தரத்து அரசு -
அழகின் தலைமை. முருகன் விற்படையும் உடையனாதலைக்     கருதி,
‘‘சிலைக்கை மைந்தன்’’ என்றான்.   அம்  சொல்  -  அழகிய  சொல்;
இஃது  அதனையுடையாள்மேல்   நின்றது.  ‘ஐயுறும்’  என்றது  முற்று.
‘வகையானே’    என  உருபு   விரிக்க.    ‘அம் சொலாள்,   மையல்
கொண்டு, மைந்தனை, சுந்தரத்து அரசாகிய   இது, சுடரோ, பரிதியோ...
...என்ன வகைவகையாக ஐயுறும் ’ என்க.


மேல்