சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

8. கோயில்


82.

தாயினே ரிரங்குந் தலைவவோ என்றும்
   தமியனேன் துணைவவோ என்றும்
நாயினேன் இருந்து புலம்பினால் இரங்கி
   நலம்புரி பரமர்தங் கோயில்
வாயினே ரரும்பு மணிமுருக் கலர
   வளரிளஞ் சோலைமாந் தளிர்செந்
தீயினே ரரும்பு பெரும்பற்றப் புலியூர்த்
   திருவளர் திருச்சிற்றம் பலமே.                 (3)
 

82.   ‘‘தாயின்’’ என்றதில் இன், சாரியை. இனி இதனை உருபாக்கி,
‘நேர்  நின்று  இரங்கும்’ என உரைத்தலும் ஆம். ‘‘தலைவ, துணைவ’’
என்ற  விளிகட்குப்  பின்னர்  நின்ற  ஓகாரங்கள்  முறையீடு குறித்து
நின்றன.   வாயின்   ஏர்   அரும்பு-மகளிரது   வாய்போல  எழுச்சி
விளங்குகின்ற.  மணி  முருக்கு-அழகிய  முருக்க  மலர்.  நேர் தீயின்
அரும்பு-அதன் எதிராக நெருப்புப்போலத் தோன்றுகின்ற.  


மேல்