சொல்லகராதிச் சுருக்கம் |
3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
8. கோயில்
88. | பின்னுசெஞ் சடையும் பிறைதவழ் மொழுப்பும் பெரியதங் கருணையுங் காட்டி அன்னைதேன் கலந்தின் னமுதுகந் தளித்தாங் கருள்புரி பரமர்தங் கோயில் புன்னைதேன் சொரியும் பொழிலகங் குடைந்து பொறிவரி வண்டினம் பாடும் தென்னதேன் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே. (9) |
88. மொழுப்பு-முடி. ‘அன்னை அளித்தாங்கு’ என இயையும். |
மேல் |