சொல்லகராதிச் சுருக்கம்

1. திருவிசைப்பா

1. கோயில்


4.

பெருமையிற் சிறுமை பெண்ணொடா ணாய்என்
   பிறப்பிறப் பறுத்தபே ரொளியே !
கருமையின் வெளியே ! கயற்கணாள் இமவான்
   மகள்உமை யவள்களை கண்ணே !
அருமையின் மறைநான் கோலமிட் டரற்றும்
   அப்பனே அம்பலத் தமுதே
ஒருமையிற் பலபுக் குருவிநின் றாயைத்
   தொண்டனேன் உரைக்குமா றுரையே.            (4)
 

4. பெருமையின் -  பெருமையாய்   உள்ள   நிலையிற்றானே.
‘‘கருமையின்   ஒருமையின்’’    என்பவற்றிற்கும்  இவ்வாறு  உரைக்க.
‘‘ஆய்’’     என்றதனை,     ‘‘சிறுமை’’     என்றதற்கும்    கூட்டுக.
வெளி-வெண்மை.  ‘‘களைகண்ணே’’  என்பதில் ணகர ஒற்று விரித்தல்,
களைகண்-பற்றுக்கோடு; ‘கொழுநன்’என்பதும்     இப்பொருட்டு. ‘‘மறை’
 என்றது  பெயராகலின், சாரியை உள்வழித்   தன்னுருபு  கெட்டது.
(தொல்,  எழுத்து   157). எனவே, ‘அருமையையுடைய மறை’ என்பது
பொருளாயிற்று. 


மேல்