சொல்லகராதிச் சுருக்கம்

4. பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா

19. கோயில்


189.

களையா உடலோடு சேரமான் ஆரூரன்
விளையா மதம்மாறா வெள்ளானை மேல்கொள்ள
முளையா மதிமுடி மூவா யிரவரொடும்
அளையா விளையாடும் அம்பலம்நின் ஆடரங்கே.      (5)
 


189.     ‘சேரமானொடு’  என  உடனிகழ்ச்சிப்  பொருளில்  வரும்
ஓடுவுருபு     விரிக்க.    ‘மதம்    விளையா’    என     மாற்றுக.
விளையா  - விளைந்து;  பெருகி.   மாறா - நீங்காத.  மேற்கொள்ள - 
ஏறிச்     செல்லும்படி.  முளையாம் -   இளைதாகிய.   அளையா  -
கலந்து.  ‘மேற்கொள்ள  விளையாடும்’  என இயையும். ‘மேல் கொள்ள
விளையாடும்    அம்பலம்    நின்     ஆடரங்கே’   என்றாராயினும்.
‘மேல்கொள்ள   விளையாடி   ஆடு   அரங்கு  அம்பலமே’  என்பது
கருத்தென்க.


மேல்