சொல்லகராதிச் சுருக்கம்

5. கண்டராதித்தர் திருவிசைப்பா

20. கோயில்


198.

மானைப் புரையும் மடமென் னோக்கி
   மாமலை யாளோடும்
ஆனஞ் சாடுஞ் சென்னி மேல்ஓர்
   அம்புலி சூடும் அரன்
றேனைப் பாலைத் தில்லை மல்கு
   செம்பொனின் அம்பலத்துக்
கோனை ஞானக் கொழுந்து தன்னைக்
   கூடுவ தென்றுகொலோ!                        (4)
 

198.     ஆன் அஞ்சு-பஞ்ச கௌவியம். ‘‘ஆவினுக்    கருங்கலம்
அரன்அஞ்   சாடுதல்’’   என்ற   அப்பர்  திருமொழியைக்   காண்க.
‘ஆனைஞ்சு’ எனவும் பாடம் ஓதுவர். அம்புலி-சந்திரன்  


மேல்