7. திருவாலியமுதனார் திருவிசைப்பா
24. கோயில்
244. | மாலோ டயனும்அமரர் பதியும் வந்து வணங்கிநின் றால கண்டா அரனே யருளாய் என்றென் றவரேத்தச் சேலா டும்வயல் தில்லை மல்கு சிற்றம் பலந்தன்னுள் பாலா டும்முடிச் சடைகள் தாழப் பரமன் ஆடுமே. (9) |
244. அமரர் பதி-தேவர்கள் தலைவன்; இந்திரன், ஆலம்-நஞ்சு. ’ஆலா கண்டா’ எனப் பாடம் ஓதி, ‘ஆலால’ என்பது குறைந்து நின்றதாக உரைப்பினும் இழுக்கில்லை. ‘‘அவர்’’ என மீட்டும் கூறியது, அவரது பெருமை குறித்து. ‘‘மல்கு சிற்றம்பலம்’’ என்பது முன்னும் வந்தது (6). பால் ஆடும்-சுற்றிலும் சுழன்றாடுகின்ற. ‘பாலாடும் சடை’ என இயையும். ‘பாலாடும் முடி’ என்று இயைத்து, ‘பாலில் மூழ்குகின்ற சென்னி’ எனவும் உரைப்பர். தாழ-நீண்டு விளங்க. |