சொல்லகராதிச் சுருக்கம்

7. திருவாலியமுதனார் திருவிசைப்பா

25. கோயில்


254.

சேர்வன்கொ லோஅன்னைமீர் திக
   ழும்மலர்ப் பாதங்களை
ஆர்வங் கொளத்தழுவி அணி
   நீறென் முலைக்கணியச்
சீர்வங்கம் வந்தணவுந் தில்லை
   மாநகர்ச் சிற்றம்பலத்
தேர்வங்கை மான்மறியன் எம்
   பிரான்போல் நேசனையே.                    (8)
 


254.     ‘அன்னைமீர், என் நேசனை, அவன் அணி நீற்றை என்
முலைக்கு   அணியுமாறு,   அவன்  மலர்ப்  பாதங்களைத்  தழுவிச்
சேர்வன்கொலோ’  எனக்  கொண்டு  கூட்டுக. ‘‘அன்னைமீர்’ என்றது,
கைத்  தாயரை.  அணி-அழகு. பிறராயின் சந்தனகளபங்களைப்  பூசிச்
சேர்வர்  இவன் திருநீற்றையே பூசிச் சேர்வான். ஆதலின், ‘‘அணிநீறு
அணிய’’   என்றாள்.   வங்கம்   மரக்கலம்.   ஏர்வு-எழுச்சி  போல்,
அசைநிலை.   ‘புவனேசன்   என்பது,   போனேசன்   எனமருவிற்று’
என்பாரும், பிற உரைப்பாரும் உளர்.


மேல்