சொல்லகராதிச் சுருக்கம்

1. திருவிசைப்பா

4. கோயில்


44.

விண்ணவர் மகுட கோடி
   மிடைந்தொளி மணிகள் வீசும்
அண்ணல்அம் பலவன் கொற்ற
   வாசலுக் காசை யில்லாத்
தெண்ணரைத், தெருள உள்ளத்
   திருளரைத், திட்டை முட்டைப்
பெண்ணரைக் காணா கண்; வாய்
   பேசாதப் பேய்க ளோடே.                    (10)
 

44.    ‘வீசும் வாசல்’ என இயையும். வாசல், ‘வாயில்’  என்பதன்
மரூஉ.  தெண்ணர்,  ‘திண்ணர்’  என்பதன்  மரூஉ’  ‘மூர்க்கர்’ எனப்
பொருள்    தந்தது.   ‘‘தெண்ணர்   கற்பழிக்   கத்திரு  உள்ளமே’’
(திருமுறை-3, 47, 3) என வந்தமை காண்க. ‘உள்ளத்து இருளர்’ என்க.
‘திட்டை,   முட்டை’   என்பன:  பகுப்பற்ற  பிண்டத்தை  உணர்த்தி
நின்றன.  ‘‘பெண்ணர்’’  என்பதற்கு,  ‘‘பேடர்’’ என்றதற்கு உரைத்தது
உரைக்க.  


மேல்