சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

12. திரைலோக்கிய சுந்தரம்


131. 
  

சரிந்ததுகில், தளர்ந்தஇடை அவிழ்ந்தகுழல்
                                   [இளந்தெரிவை
இருந்தபரி சொருநாள்கண் டிரங்காய்எம் பெருமானே !
முரிந்தநடை மடந்தையர்தம் முழங்கொலியும்
                                  [வழங்கொலியும்
திருந்துவிழ வணிகோடைத் திரைலோக்கிய சுந்தரனே.  (10)
 

131.     ‘துகிலையும் இடையையும், குழலையும் உடைய  தெரிவை’
என்க.   இவ்வாறு  ஓதினாரேனும்  ‘தெரிவை  துகில்தளர்ந்து,  இடை
தளர்ந்து,  குழல்  அவிழ்ந்து இருந்த பரிசு கண்டு இரங்காய்’ என்றலே
கருத்தாதல்  உணர்க. முரிந்த நடை - அசைந்த நடை. வழங்கு ஒலி -
மத்தளம்  முதலிய  வாச்சியங்கள்  தருகின்ற ஓசை. திருந்து  விழவு -
திருத்தமாய் உள்ள விழாக்கள். அணி - அழகு செய்கின்ற.  


மேல்