சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

15. திருச்சாட்டியக்குடி


159.

செங்கணா ! போற்றி திசைமுகா போற்றி !
   சிவபுர நகருள்வீற் றிருந்த
அங்கணா போற்றி ! அமரனே போற்றி !
   அமரர்கள் தலைவனே போற்றி !
தங்கணான் மறைநூல் சகலமுங் கற்றோர்
   சாட்டியக் குடியிருந் தருளும
எங்கணா யகனே போற்றி ! ஏ ழிருக்கை
   யிறைவனே போற்றியே ! போற்றி !              (8)
 

159.       செங்கணா-திருமாலே.             போற்றி-வணக்கம்.
திசைமுகா-பிரமதேவனே     சிவபுர     நகருள்         வீற்றிருந்த
அங்கணா-சிவனே.     அமரனே-தேவகூட்டத்தினனே,     அமரர்கள்
தலைவனே-இந்திரனே.  சிவபெருமான்  ஒருவனே  இவர்  யாவருமாய்
நின்று  அருள்செய்தல்  பற்றி இவ்வாறு கூறினார். ‘‘தங்கள் நான்மறை
நூல்’   என்றதனால்,  திருச்சாட்டியக்குடியில்  உள்ளோர்   அந்தணர்
என்பது பெறப்படும்.


மேல்