6. வேணாட்டடிகள் திருவிசைப்பா
21. கோயில்
206. | தம்பானை சாய்ப்பற்றார் என்னும் முதுசொல்லும் எம்போல்வார்க் கில்லாமை என்னளவே அறிந்தொழிந் [தேன் வம்பானார் பணிஉகத்தி வழிஅடியேன் தொழில் இறையும் நம்பாய்காண்; திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே. (2) |
206. ‘சாய’ என்பதன் இறுதி அகரம் தொகுத்தலாயிற்று. தம் பானை சாயப் பற்றார் - ஒருவரும் தங்கள் பானையைக் கீழே விழுமாறு பிடிக்கமாட்டார்கள்; அஃதாவது, ‘கருத்தின்றிப் |
புறக்கணிப்பாகக் கையாளார்’ என்பதாம், முதுசொல்-பழமொழி, ‘இறைவன் தம்மைப் புறக்கணித்துவிட்டான்’ என்னும் கருத்தினால் ’ அம்முதுசொல் எம்போல்வார்க்கு இல்லாமை என்னளவிலே அறிந்தொழிந்தேன்’ என்றார். ‘‘சொல்லும்’’ என்னும் உம்மை, சிறப்பு. ‘‘அறிந்தொழிந்தேன்’’ என்பது ஒருசொல் நீர்மைத்து, வம்பு ஆனார் பணி உகத்தி-புதியராய் வந்து அடியராயினாரது தொண்டினையும் விரும்புகின்ற நீ ‘பணியும்’ என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. வழி அடியேன் தொழில் இறையும் நம்பாய்- வழியடியேனாகிய எனது தொண்டினைச் சிறிதும் விரும்பவில்லை. |