சொல்லகராதிச் சுருக்கம்

7. திருவாலியமுதனார் திருவிசைப்பா

25. கோயில்


247.

கோல மலர்நெடுங்கட் கொவ்வை
   வாய்க்கொடி யேரிடையீர்
பாலினை யின்னமுதைப் பர
   மாய பரஞ்சுடரைச்
சேலுக ளும்வயல்சூழ் தில்லை
   மாநகர்ச் சிற்றம்பலத்
தேலுடை எம்மிறையை
   என்றுகொல் காண்பதுவே.                     (1)
 


247.    கோலம்-அழகு. ‘கோலக் கண்’ என இயையும், ‘‘கொடி ஏர்
இடையீர்’’   என்றதில்   ஏர்,   உவம  உருபு.  ‘‘இடையீர்’’  என்றது
பாங்கியரை.    பரம்   ஆய-எப்பொருட்கும்   முன்னதாகிய.   பரஞ்
சுடர்-மேலான   ஒளி.   சேல்   உகளும்-கயல்மீன்கள்   துள்ளுகின்ற.
ஏல்-ஏற்றல்;  முதனிலைத்  தொழிற்பெயர்.  ஏற்றல்-எழுந்தருளியிருக்க
இசைதல்.   ‘ஏலஉடை’  என்பது  பாடம்  அன்று.  ‘‘இறை’’  என்றது.
சொல்லால்   அஃறிணையாதலின்,   ‘‘பரம்,   சுடர்’’  என்றவற்றோடு’
இயைந்து நின்றது. கொல்,ஐயத்துக்கண் வந்தது.


மேல்