சொல்லகராதிச் சுருக்கம்

8. புருடோத்தம நம்பி திருவிசைப்பா

27. கோயில்


278.

ஒண்ணுதலி காரணமா உம்பர் தொழுதேத்தும்
கண்ணுதலான் றன்னைப் புருடோத் தமன்சொன்ன
பண்ணுதலைப் பத்தும் பயின்றாடிப் பாடினார்
எண்ணுதலைப் பட்டங் கினிதா இருப்பாரே.          (11)

திருச்சிற்றம்பலம்
 


278.   ஒண்ணுதலி. இதனுள்கூற்று நிகழ்த்திய தலைவி. ‘காரணமாச்
சொன்ன’   என   இயையும்.   ‘பண்ணு   பத்து’   என   இயைத்து
வினைத்தொகையாக்குக.    பண்ணுதல்-யாழைப்   பண்ணுக்கு   ஏற்ப
அமைத்தல்.  ‘அங்ஙனம் அமைத்துப் பாடுதற்குரிய பத்துப்  பாடல்கள்’
என்றவாறு. தலைப் பத்து-தலையாய பத்துப் பாடல்கள்.  பயின்று-கற்று.
எண்ணுதலைப்   பட்டு-யாவராலும்  மதிக்கப்   படுதலைப்  பொருந்தி.
அங்கு-சிவலோகத்தில்.


மேல்