சொல்லகராதிச் சுருக்கம்

1. திருவிசைப்பா

3. கோயில்


33.

‘உற்றாய்! ’ என் னும்; உன்னை யன்றி மற்றொன்
   றுணரேன் ’ என் னும்உணர் வுள்கலக்கப்
பெற்றாய ஐந்தெழுத் தும்பிதற்றிப்
   பிணிதீர்வெண் ணீறிடப் பெற்றேன்;’ என்னும்;
‘சுற்றாய சோதி மகேந்திரம் சூழ
   மனத்திருள் வாங்கிச்சூ ழாத நெஞ்சில்
குற்றாய்!’ என் னும்; ‘குணக் குன்றே’ என்னும்;
   குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.           (11)
 

33.   உற்றாய்-யாவரையும் உறவாகப் பொருந்தியவனே. ‘உணர்வுள்
கலக்கப்பெற்றுப்   பொருந்திய  ஐந்தெழுத்தும்’  என்க.  ‘‘உணர்வுள்’’
என்பது முதலாக, ‘‘பெற்றேன்’’ என்பது ஈறாக  உள்ளவை. தலைவியின்
கூற்றைச்   செவிலி   அங்ஙனமே  கொண்டு   கூறியன. ‘உணர்வுகள்’
என்பது   பாடம்   அன்று.   சுற்று  ஆயசோதி-  சுற்றிலும் வீசுகின்ற
ஒளியையுடைய.  ‘‘மகேந்திரம்’’  என்றது.  இகரம் அலகுபெறாது நிற்க
ஆரியம் போல நின்றது. ‘சூழ’  என்னும்   செயவெனெச்சம்,  தொழிற்

பெயர்ப்     பொருட்டாய்  நின்றது.  ‘சூழச்  சூழாத’  என இயையும்.
இதனுள்  முன்னர்  நின்ற  சூழ்தல், சார்தல். பின்னர்   நின்ற சூழ்தல்,
நினைத்தல்.   இருள்  வாங்கி-அறியாமையைப்   போக்கி,  ‘‘குத்தாய்’’
என்பது,     எதுகை    நோக்கி,    ‘குற்றாய்’     எனத்   திரிந்தது.
குத்தாய்-ஊன்றாதவனே; பொருந்தாதவனே.  


மேல்