சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

16. தஞ்சை இராசராசேச்சரம்


164.

சடைகெழு மகுடம் தண்ணிலா விரிய
   வெண்ணிலா விரிதரு தரளக்
குடைநிழல் விடைமேற் கொண்டுலாப் போதும்
   குறிப்பெனோ  ?  கோங்கிண  ரனைய 
குடைகெழு  நிருபர்  முடியொடு முடிதேய்ந்
   துக்கசெஞ் சுடர்ப்படு குவையோங்
கிடைகெழு மாடத் திஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவர்க்கே.                   (3)
 

164.    ‘மகுடத்தின்கண்’ என உருபு விரிக்க. ‘வெண்ணிலா விரிதரு
குடை’  என்க.  தரளத்தால் வெண்ணிலா விரிவதாயிற்று. தரளம்-முத்து.
குறிப்பு-கருத்து.   ‘‘குறிப்பென்னோ’’  என்றது,  ‘மாதர் உள்ளங்களைக்
கவர்வதுபோலும்’          என்னும்     குறிப்புடையது.     கோங்கு
இணர்-கோங்கம்பூக்கொத்து  ;   இது  குடைக்கு வடிவுவமை. துணியால்
ஆக்கப்பட்ட     குடைக்கு       இவ்வுவமை     பொருந்துவதாகும்.
தேய்ந்து-தேய்தலால்.  உக்க-உதிர்ந்த.    ’உக்க  குவை’ என இயையும்.
‘‘செஞ்சுடர்ப்படு  குவை’’  என்றதனால்,   ‘மாணிக்கக்  குவை’ என்பது
தோன்றிற்று.    படு-உண்டாகின்ற.    குவை    ஓங்கு    இடைகெழு
மாடம்-குவியல்கள்   மிக்கிருக்கின்ற   இடத்திற்  பொருந்திய   மாடம்.
இடம்,  வீதி.  ‘இடைகழி  மாடம்   என்பதும்  பாடம். ‘மாடத் தஞ்சை’
என்க. இப்பாட்டு, காதல் நோய் கொண்டாள் கூற்றாய் அமைந்தது.  


மேல்