சொல்லகராதிச் சுருக்கம்

6. வேணாட்டடிகள் திருவிசைப்பா

21. கோயில்


212.

வாடாவாய் நாப்பிதற்றி உனைநினைந்து நெஞ்சுருகி
வீடாம்செய் குற்றேவல் எற்றேமற் றிதுபொய்யிற்
கூடாமே கைவந்து குறுகுமா றியானுன்னை
நாடாயால் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே.      (8)
 

212.     ‘‘வாடா’’  என்பது,  ‘செய்யா’  என்னும்   வினையெச்சம்.
‘வாடி,பிதற்றி,  நினைந்து,  உருகிச்  செய்  குற்றேவல்,   என்க.  வாய்
நா-வாயின்கண்  உள்  நாவால்  ‘செய் வீடாம் குற்றேவல்’ என மாறுக.
வீட்டிற்கு    ஏதுவாவதனை,   ‘‘வீடாம்’’   என்றார்.   குற்றேவல்-சிறு
பணிவிடை. எற்று-என்ன பயனை உடையது. ‘உன்னை  அடைவதையே
பயனாக  உடையது’  என்பது  குறிப்பு. இதனால், இவர்  உலகப் பயன்
கருதி   இறைவனுக்குத்  தொண்டு  செய்யாமை   பெறப்பட்டது.  இது
பொய்யிற்கூடாமே-இக்  குற்றேவல்  பொய்யின்கண்  பொருந்தாதவாறு;
‘பழுதாகாதபடி’   என்றவாறு.   ‘கூடாமே   நாடாய்’  என  இயையும்.
‘‘கைவந்து’’  என்றதில்  கை,  இடைச்சொல்.  ‘யான் வந்து உன்னைக்
குறுகுமாறு நாடாய்’ என மாற்றிக் கூட்டுக‘ நாடாய்-நினைந்தருள்.


மேல்