7. திருவாலியமுதனார் திருவிசைப்பா
22. கோயில்
218. | போழ்ந்தி யானை தன்னைப் பொருப்பன் மகள்உமை யச்சங் கண்டவன் தாழ்ந்த தண்புனல்சூழ் தட மல்குசிற் றம்பலவன் சூழ்ந்த பாய்புலித் தோல்மிசைத் தொடுத்து வீக்கும் பொன்னூல் தன்னினொடு தாழ்ந்த கச்சதன்றே தமி யேனைத் தளர்வித்ததே. (4) |
218, போழ்ந்து - உரித்து, ‘உமையது அச்சத்தைப் பின்னர்க் கண்டவன்’ என்க. இனி, ‘‘கண்டவன்’’ என்றதற்கு’ ‘உண்டாக்கினவன்’ எனப் பொருள் கொண்டு, ‘உமைக்கு என நான்காவது விரித்தலும் ஆம். தாழ்ந்த புனல் - ஆழ்ந்தநீர். தொடுத்து வீக்கும் - வளைத்துக் கட்டிய. பொன் நூல்-அழகிய பூணநூல். ‘‘பொன்னூல் தன்னினொடு’’ என்பதை ‘‘சிற்றம்பலவன்’’ என்றதன் பின்னர்க் கூட்டுக. தாழ்ந்த கச்சு-பொருந்திய கச்சு. இப்பாடலில் சீர்கள் சிறிது வேறுபட்டு வந்தன. |