சொல்லகராதிச் சுருக்கம்

7. திருவாலியமுதனார் திருவிசைப்பா

22. கோயில்


220.

குதிரை மாவொடு தேர்ப லகுவிந்
   தீண்டுதில்லையுட் கொம்ப னாரொடு
மதுர வாய்மொழி யார்மகிழ்ந்
   தேத்துசிற் றம்பலவன்
அதிர வார்கழல் வீசிநின்றழ
   காநடம் பயில் கூத்தன் மேல்திகழ்
உதர பந்தனம்என் னுள்ளத்
   துள்ளிடங் கொண்டனவே.                     (6)
 


220.  மா-யானை.      ஈண்டு - நெருங்குகின்ற.        கொம்பு
அன்னார்-பூங்கொம்புபோலும் ஆடல் மகளிர். மதுர வாய் மொழியார்-
இனிய   இசைப்பாட்டைப்  பாடுகின்றவர்.  அதிர-ஒலிக்க.  ‘வார்கழல்
அதிர’  என  மாற்றி,  வீசுதலுக்கு,  ‘கால்’என்னும்  செயப்படுபொருள்
வருவிக்க.   ‘‘கூத்தன்’’  என்றது  அவனது  திருமேனியைக்  குறித்த
ஆகுபெயர்.  கச்சு,  மேற்கூறப்பட்டமையின்,  உதரபந்தனம் அதனின்
வேறென்க.  உதர  பந்தனம்  -  வயிற்றின்மேல்  உள்ள கட்டு, கச்சு,
அரையில் கட்டப்படுவது. ‘‘கொண்டன’’ என்ற பன்மையால் இது  பல  

சுற்றுக்களை    உடையதாதலும்    பெறப்படும்.     இதனுள்,  ‘‘அழ,
உள்ளத்து’’ என்பன கூன்.  


மேல்