7. திருவாலியமுதனார் திருவிசைப்பா
22. கோயில்
220. | குதிரை மாவொடு தேர்ப லகுவிந் தீண்டுதில்லையுட் கொம்ப னாரொடு மதுர வாய்மொழி யார்மகிழ்ந் தேத்துசிற் றம்பலவன் அதிர வார்கழல் வீசிநின்றழ காநடம் பயில் கூத்தன் மேல்திகழ் உதர பந்தனம்என் னுள்ளத் துள்ளிடங் கொண்டனவே. (6) |
220. மா-யானை. ஈண்டு - நெருங்குகின்ற. கொம்பு அன்னார்-பூங்கொம்புபோலும் ஆடல் மகளிர். மதுர வாய் மொழியார்- இனிய இசைப்பாட்டைப் பாடுகின்றவர். அதிர-ஒலிக்க. ‘வார்கழல் அதிர’ என மாற்றி, வீசுதலுக்கு, ‘கால்’என்னும் செயப்படுபொருள் வருவிக்க. ‘‘கூத்தன்’’ என்றது அவனது திருமேனியைக் குறித்த ஆகுபெயர். கச்சு, மேற்கூறப்பட்டமையின், உதரபந்தனம் அதனின் வேறென்க. உதர பந்தனம் - வயிற்றின்மேல் உள்ள கட்டு, கச்சு, அரையில் கட்டப்படுவது. ‘‘கொண்டன’’ என்ற பன்மையால் இது பல |
சுற்றுக்களை உடையதாதலும் பெறப்படும். இதனுள், ‘‘அழ, உள்ளத்து’’ என்பன கூன். |