7. திருவாலியமுதனார் திருவிசைப்பா
24. கோயில்
241. | குரவம் கோங்கம் குளிர்புன்னை கைதை குவிந்த கரைகள்மேல் திரைவந் துலவும் தில்லை மல்கு சிற்றம் பலந்தன்னுள் வரைபோல் மலிந்த மணிமண் டபத்து மறையோர் மகிழ்ந்தேத்த அரவம்ஆட அனல்கை யேந்தி அழகன் ஆடுமே. (6) |
241. கைதை-தாழை. குவிந்த-திரண்டுள்ள. கரை-கடற்கரை.அதன் இடப்பகுதிகள் பற்றி, ‘கரைகள்’ எனப்பலவாகக் கூறினார். திரை-அலை. ‘தில்லைச் சிற்றம்பலம்’ என இயையும், சிற்றம்பலம், இங்குக் கோயிலைக் குறித்தது. மல்கு-அழகு நிறைந்த. வரை-மலை. மலிந்த மணி-நிறைந்த இரத்தினங்களால் ஆகிய, ‘மண்டபத்து ஆடும்’ என இயையும். |