சொல்லகராதிச் சுருக்கம்

7. திருவாலியமுதனார் திருவிசைப்பா

25. கோயில்


249.

கள்ளவிழ் தாமரைமேற் கண்
   டயனொடு மால்பணிய
ஒள்ளெரி யின்னடுவே உரு
   வாய்ப்பரந் தோங்கியசீர்த்
தெள்ளிய தண்பொழில்சூழ் தில்லை
   மாநகர்ச் சிற்றம்பலத்
துள்ளெரி யாடுகின்ற ஒரு
   வனையு ணர்வரிதே !                         (3)
 


249. கள் அவிழ்-தேனோடு மலர்கின்ற. ‘தாமரைமேல் அயன்’ என
இயையும்.     ‘கண்ட’     என்பதன்     ஈறு    தொகுத்தலாயிற்று.
கண்ட-உலகத்தைப்   படைத்த.  ‘‘முழுவதுங்   கடைவனை’’ என்ற
திருவாசகத்தைக்   காண்க  (திருச்சதகம்.7.).   பணிய-செருக்கொழிந்து
வணங்குமாறு.    ‘நடுவே    எரியின்    உருவாய்’   என  மாற்றுக.
நடுவே-அவ்விருவர்க்கும்  நடுவிலே. ‘ஓங்கிய ஒருவன்’ எனவும். ‘சீர்த்
தில்லை,  தெள்ளிய  தில்லை, எனவும் இயையும். தெள்ளிய-மேலோர்,
தமக்குப்  புகலிடமாகத்  தெளிந்த.  ‘உணர்தல்  எனக்கு அரிதாகியே
விடுமோ’  என்பது  பொருள்.  உணர்தல், இங்குத்தலைப்பட்டுணர்தல்,
‘ஒருவன்னை’ என ஒற்று விரித்து ஓதுவதே பாடம் போலும் !


மேல்