சொல்லகராதிச் சுருக்கம்

9. சேதிராயர் திருவிசைப்பா

28. கோயில்


281.

காரி கைக்கரு ளீர்கரு மால்கரி
ஈரு ரித்தெழு போர்வையி னீர்மிகு
சீரியல் தில்லை யாய்சிவ னேஎன்று
வேரி நற்குழ லாள்இவள் விம்முமே.                (3)
 


281.     ‘‘காரிகைக்கு  அருளீர்’’  என்றதை  இறுதிக்கண்  கூட்டி,
‘‘காரிகைக்கு’’  என்றது.  ‘இவட்கு’  எனச் சுட்டளவாய் நின்றதாகலின்,
‘‘இவள்’’  என்றதற்கு,  ‘‘காரிகை’’ என  உரைக்க. ‘கருங்கரி, மால் கரி’
எனத்  தனித்தனி  இயைக்க.  மால்-பெரிய.  ‘‘ஈர்  உரித்து’’  என்றது,
‘‘ஈர்ந்து உரித்து’’ எனப் பொருள் தந்தது. ‘‘வரிப்புனை பந்து’’ என்றாற்
போல (முருகு-568). சீர் இயல்-தன் புகழ் எங்கும் பரவிய.  வேரி-தேன்.
‘குழலாளாகிய  இவள்’  என்க. ‘‘சீரியல் தில்லையாய்’’ என்றது தலைவி
கூற்றாய் வேறு முடிதலின், பால் வழுவாகாமை உணர்க.


மேல்