சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

8. கோயில்


86.

பூத்திரள் உருவம் செங்கதிர் விரியாப்
   புந்தியில் வந்தமால் விடையோன்
தூத்திரட் பளிங்கிற் றோன்றிய தோற்றந்
   தோன்றநின் றவன்வளர் கோயில்
நாத்திரள் மறையோர்ந் தோமகுண் டத்து
   நறுநெயால் மறையவர் வளர்த்த
தீத்திரள் அரும்பு பெரும்பற்றப் புலியூர்த்           (7)
   திருவளர் திருச்சிற்றம் பலமே.

86. ‘தீத்திரளின் உருவம்போல’ என உவம உருபு விரிக்க. புந்தியில்
-  எமது  மனத்தில்,  ‘‘மால்விடையோன்’’  என்றது  ஒரு   பெயராய்,
‘‘வந்த’’  என்றதற்கு  முடிபாயிற்று.  தூத்திரட்  பளிங்கில்  தோன்றிய
தோற்றம்   தூய   பளிங்கின்   திரளினின்றும்   தோன்றிய   காட்சி.
தோன்ற-காணப்படுமாறு.  நா-நாவினால்.  ‘சிவபெருமானது  திருமேனி
பளிங்குபோல்வது,  திருநீற்றினால்’  என்பது  முன்னும்  கூறப்பட்டது.
‘நாஓர்ந்து’ என, ஓர்தல், இங்கு, ‘ஓதி’ என்னும் பொருட்டாய்  நின்றது.


மேல்