சொல்லகராதிச் சுருக்கம்

7. திருவாலியமுதனார் திருவிசைப்பா

22. கோயில்


225.

தூவி நீரொடு பூவ வைதொழு
   தேத்து கையின ராகி மிக்கதோர்
ஆவி யுள்நிறுத்தி யமர்ந்
   தூறிய அன்பினராய்த்
தேவர்தாந் தொழ ஆடிய தில்லைக்
   கூத்த னைத்திரு வாலி சொல்லிவை
மேவ வல்லவர்கள் விடை
   யான்அடி மேவுவரே.                         (11)

திருச்சிற்றம்பலம்
 


225.   ‘நீரொடு பூஅவை தூவி’ என மாற்றுக.  ஆவி-பிராண வாயு.
அமர்ந்து-விரும்பி.  ஊறிய அன்பு-சுரந்த அன்பு.  ‘சுரக்கின்ற என்னும்
நிகழ்காலம்   இறந்த   காலமாகச்   சொல்லப்பட்டது.  மேவ-விரும்ப;
என்றது.  ‘விரும்பிப்  பாட’  என்றவாறு.   மேவுவர்-சேர்வர். இதனுள்,
‘அமர்ந்து,விடை’ என்பன கூன்.  


மேல்