7. திருவாலியமுதனார் திருவிசைப்பா
22. கோயில்
225. | தூவி நீரொடு பூவ வைதொழு தேத்து கையின ராகி மிக்கதோர் ஆவி யுள்நிறுத்தி யமர்ந் தூறிய அன்பினராய்த் தேவர்தாந் தொழ ஆடிய தில்லைக் கூத்த னைத்திரு வாலி சொல்லிவை மேவ வல்லவர்கள் விடை யான்அடி மேவுவரே. (11) திருச்சிற்றம்பலம் |
225. ‘நீரொடு பூஅவை தூவி’ என மாற்றுக. ஆவி-பிராண வாயு. அமர்ந்து-விரும்பி. ஊறிய அன்பு-சுரந்த அன்பு. ‘சுரக்கின்ற என்னும் நிகழ்காலம் இறந்த காலமாகச் சொல்லப்பட்டது. மேவ-விரும்ப; என்றது. ‘விரும்பிப் பாட’ என்றவாறு. மேவுவர்-சேர்வர். இதனுள், ‘அமர்ந்து,விடை’ என்பன கூன். |