சொல்லகராதிச் சுருக்கம்

1. திருவிசைப்பா

4. கோயில்


41.

உருக்கினன் உள்ளத் துள்ளே
   ஊறலந் தேறல் மாறாத்
திருக்குறிப் பருளுந் தில்லைச்
   செல்வன்பால் செல்லுஞ் செல்வில்
அருக்கரை, அள்ளல் வாய
   கள்ளரை, அவியாப் பாவப்
பெருக்கரைக் காணா கண் ; வாய்
   பேசாதப் பேய்க ளோடே.                     (7)
 

41. ‘என் உள்ளத்தை உருக்கி அதனுள்ளே ஊறுதல் உடைய தேறல்
நீங்காமைக்கு  ஏதுவாகிய  திருக்குறிப்பு, என்க. தேறல்-தேன், என்றது
பேரின்பத்தை.  திருக்குறிப்பு,  நடனத்தில்  உள்ளது.  ‘செல்வம்  இல்’
என்பது,   ‘செலவில்’  எனக்  குறைந்து  நின்றது. அருக்கர்- சுருக்கம்
உடையவர்;   பெருக்கம்   இல்லாதவர். அள்ளல்வாய- நரகத்தின்கண்
உள்ள. கள்ளர்-வஞ்சகர். அவியா-கெடாத.


மேல்