சொல்லகராதிச் சுருக்கம்

1. திருவிசைப்பா

1. கோயில்


9.

தக்கன்நற் றலையும் எச்சன்வன் றலையும்
   தாமரை நான்முகன் தலையும்
ஒக்கவிண் டுருள ஒண்டிருப் புருவம்
   நெறித்தரு ளியஉருத் திரனே!
அக்கணி புலித்தோ லாடைமேல் ஆட
   ஆடப்பொன் னம்பலத் தாடும்
சொக்கனே! எவர்க்கும் தொடர்வரி யாயைத்
   தொண்டனேன் தொடருமா தொடரே.            (9)
 

9. இத் திருப்பாட்டின் முதல் இரண்டடிகளுட் போந்த பொருளை.  

‘‘தக்கனையும் எச்சனையும் தலையறுத்துத் தேவர்கணம்
தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ’’
                                 (திருச்சாழல்-5.)

எனவும்,  

‘‘நாமகள் நாசி சிரம்பிர மன்பட’’
                                 
(திருவுந்தியார்-13.)

எனவும்  திருவாசகத்  துள்ளும்  போந்தமை காண்க. ‘எச்ச வன்தலை’
எனவும்  பாடம்  ஓதுப. ‘‘புருவம் நெறித்தருளிய’’ என்றது, ‘வெகுண்ட’
என்றவாறு.  ‘புலித்தோல்  ஆடைமேல் அக்குஅணி ஆடஆட ஆடும்
சொக்கன்’  என்க. அக்கு அணி - எலும்பு மாலை. சொக்கன்-அழகன்.
தொடர்தல்-இடைவிடாது பற்றுதல்.


மேல்