சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

12. திரைலோக்கிய சுந்தரம்


125, 
   

மைஞ்ஞின்ற குழலாள்தன் மனம்தரவும் வளைதாரா
திஞ்ஞின்ற கோவணவன் இவன்செய்த தியார்செய்தார் !
மெய்ஞ்ஞின்ற தமர்க்கெல்லாம் மெய்ஞ்ஞிற்கும்
                                    [பண்பினுறு
செய்ஞ்ஞன்றி யிலன்கோடைத் திரைலோக்கிய
                                 [சுந்தரனே.   (4)
 

125. இத் திருப்பாட்டில்,நகாரங்கட்கெல்லாம்,ஞகாரங்கள் போலியாய்
வந்தன.இவ்வாறு வருதலை, ‘‘செய்ஞ்ஞின்ற நீலம்’(திருமுறை-4-80.5.)
என்னும்  அப்பர்  திருமொழியிற்  காண்க.  மை நின்ற-கருமை நிறம்
பொருந்திய   ;  இனி  ‘மேகம்  நின்றது  போன்ற’  என்றும்  ஆம்.
‘திரைலோக்கிய  சுந்தரன்,  தனக்குத்  தன்  உயிர்போன்ற மனத்தைக்
கொடுத்தவட்கு,  அவளது  வளையையும்  திரும்பத்  தருகின்றிலன் ;
இதுபோலும்  நன்றியில்லாத  செயலை  இதற்குமுன்  யார் செய்தார் ;
ஒருவரும்   செய்திலர்.  அதனால்,  இவன்  மெய்ம்மை  பொருந்திய
அன்பராயினார்க்குத்     தானும்     மெய்ம்மையான     அருளில்
பொருந்தவேண்டிய  நன்றியறியும்  பண்பு  இல்லாதவன் ஆகின்றான்’
எனப்  பழித்தவாறு,  காதல்  மிகுதியாற்  கூறினமையின், இப் பழிப்பு
அமைவதாயிற்று.       இந்        நின்ற-இங்கு         நிற்கின்ற.
கோவணவன்-கோவணமாக உடுத்த உடையை யுடையவன்.  


மேல்