6. வேணாட்டடிகள் திருவிசைப்பா
21. கோயில்
209. | நின்றுநினைந் திருந்துகிடந் தெழுந்துதொழும் தொழும் [பனேன் ஒன்றிஒரு கால்நினையா திருந்தாலும் இருக்கவொட்டாய் கன்றுபிரி கற்றாப்போல் கதறுவித்தி வரவுநில்லாய் நன்றிதுவோ திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே. (5) |
209. ‘‘நின்று............. தொழும்பனேன்’’ என்றதற்கு,‘ நின்றவிடத்தும், இருந்தவிடத்தும், கிடந்தவிடத்தும் நினைந்து, எழுந்தவிடத்துத் தொழுகின்ற தொழும்பனேன்’ என உரைக்க |
நிற்றல் முதலிய மூன்றும் செயலற்றிருக்கும் நிலையாதலின், அக்காலங்களில் நினைதலும், எழுதல் கிளர்ந்தெழுந்து செயற்படும் நிலையாகலின், அக்காலத்தில் தொழுதலும் கூடுவவாயின. ‘இரு நிலையிலும் உன்னை மறவாதிருக்கின்ற யான், ஒரோவொருகால் எக்காரணத்தாலேனும் மறந்திருப்பினும் இருக்கவொட்டாய்’ என்க. இதன்பின், ‘ஆயினும்’ என்பது வருவிக்க. ஒன்றி-உன்னைப் பொருந்தி; என்றது, பிறவற்றை மறந்து’ என்றவாறு. இது, ‘நினையாது’ என்பதில், ‘நினைதல்’ வினையோடு முடிந்தது. ‘‘வரவு’’ என்றதில், ஓடு உருபுவிரித்து, ‘வரவொடு நில்லாயாய்; ஆப்போல் கதறுவித்தி’ என மாற்றி உரைக்க. கன்று பிரி-கன்றினால் பிரியப்பட்ட, ‘‘கற்றா’’ என்றது, வாளாபெயராய் நின்றது. |