7. திருவாலியமுதனார் திருவிசைப்பா
25. கோயில்
255. | நேசமு டையவர்கள் நெஞ்சு ளேயிடங் கொண்டிருந்த காய்சின மால்விடையூர் கண் ணுதலைக் காமருசீர்த் தேச மிகுபுகழோர் தில்லை மாநகர்ச் சிற்றம்பலத் தீசனை எவ்வுயிர்க்கும் எம் இறைவன்என் றேத்துவனே. (9) |
255. காய் சினம், இன அடை. மால் விடை-பெரிய இடபம். ‘திருமாலாகிய இடபம்’ எனலும் ஆம். காமரு-விரும்பத் தக்க. சீர்-அழகு. ‘சீர்த் தில்லை’ என இயையும். தேசம் மிகு புகழ்-நில முழுதும் பரவிய புகழ். ‘‘புகழோர்’’ என்றது, தில்லைவாழ் அந்தணரை. ‘எவ்வுயிர்க்கும் இறைவன் என்று ஏத்துவன்’ என்றது, ‘அவனது பெருமை யறிந்து காதலித்தேன்’ என்றவாறு. ‘இனி அவனைத் தலைப்படுதல் என்றோ’ என்பது குறிப்பெச்சம். இறைவன்-தலைவன். |