சொல்லகராதிச் சுருக்கம்

7. திருவாலியமுதனார் திருவிசைப்பா

22. கோயில்


216.

சலம்பொற் றாமரை தாழ்ந்தெ ழுந்ததட
   முந்த டம்புனல் வாய்மலர் தழீஇ
அலம்பி வண்டறையும் அணி
   யார்தில்லை யம்பலவன்

புலம்பி வானவர் தான வர்புகழ்ந்
   தேத்த ஆடுபொற் கூத்த னார்கழற்
சிலம்பு கிங்கிணிஎன் சிந்தை
  
யுள்ளிடங் கொண்டனவே.                      (2)
 


216. சலம் - நீரின்கண். பொன் - அழகு. தாழ்ந்து எழுந்து  - ஆழ
வேரூன்றி  வளர்ந்த. தடம் - குளத்தின்கண். ‘தடமும்’ என்பது  பாடம்
அன்று,   தடம்    புனல்வாய்  -மிக்க   நீரின்கண்   உள்ள.   ‘அத்
தடம்புனல்வாய்’ எனச்  சுட்டு வருவிக்க.  அலம்பி - கிண்டி. புலம்பி - முறையிட்டு்.  தானவர்-அசுரர்.  பொற் கூத்து - பொன்போலச்  சிறந்த
நடனம், சிலம்பு-  ஒலிக்கின்ற.  இதனுள்ளும், ‘‘அணி, சிந்தை’’ என்பன
கூன்.  


மேல்