சொல்லகராதிச் சுருக்கம்

8. புருடோத்தம நம்பி திருவிசைப்பா

27. கோயில்


268.

வானவர்கள் வேண்ட வளர்நஞ்சை உண்டார்தாம்
ஊனமிலா என்கை ஒளிவளைகள் கொள்வாரோ
தேனல்வரி வண்டறையுந் தில்லைச்சிற் றம்பலவர்
நானமரோ என்னாதே நாடகமே யாடுவரே.           (1)
 


268,   ‘தேவர்கள் இறந்தொழியாதவாறு நஞ்சினை உண்டு அன்று
அவர்களைக் காத்த பேரருளாளர், இன்று என் வளைகளைக் கவர்ந்து
எனக்கு   இறந்துபாடு   உறுவிக்கின்றாரோ  !  இது  வியப்பாகின்றது’
என்பது,  முதல்  இரண்டடிகளின்  பொருள்.  ஓகாரம், இழிவு சிறப்பு.
‘தேன்  வண்டு’  என  இயையும்.  நமர்-  நம் உறவினர். என்னாது -
என்று  சொல்லாதபடி; என்றது, ‘என் துன்பத்தைத் தவிர்க்காது நின்று’
என்றதாம். ‘‘நாடகம்’’ என்றது சிலேடை; இறைவனது அருட்கூத்தோடு,
போலி    வேடங்கொண்டு    நடித்தலையும்   குறித்தலின்.  தனக்கு
அருளாமை   பற்றி,  அனைத்துயிர்க்கும்  அருள்புரியும்   கூத்தினை,
‘நாடகம்’ என்றாள் என்க.


மேல்