சொல்லகராதிச் சுருக்கம்

8. புருடோத்தம நம்பி திருவிசைப்பா

27. கோயில்


271.

ஆரே இவைபடுவார்? ஐயம் கொளவந்து
போரேடி என்று புருவம் இடுகின்றார்

தேரார் விழவோவாத் தில்லைச்சிற் றம்பலவர்

தீராநோய் செய்வாரை ஒக்கின்றார் காணீரே.         (4)
 


271.      ஆரே-நற்பண்புடையார்      எவர்தாம்.       இவை
படுவார்-இக்குணங்கள்   தோன்ற  நிற்பார்.  செய்யுளாதலின்  சுட்டுப்
பெயர்  முன்வந்தது. எனவே, ‘‘இவை’’ என்றது. பிச்சையேற்பார்போல
வந்து     பெண்டிரை      மயங்கச்செய்வனவாய்        பின்வருங்
குணங்களையாயிற்று.  ஐயம்-பிச்சை.  ‘‘போர்’’  என்றதை,  ‘‘புருவம்’’
என்பதன்     பின்னர்க்கூட்டுக.    ஏடி-பெண்பால்     விளிப்பெயர்.
‘புருவத்தால்’   என   உருபு  விரிக்க.  புருவத்தால் போரிடுதலாவது.
புருவத்தை   நெறித்துக்  காதற்குறிப்புணர்த்துதல்.  இதனை,  ‘‘போர்’’
என்றாள்;    நோய்    மாத்திரமே    செய்துபோதலின்.   தீராநோய்
செய்வார்-கெடுத்  தொழியும்  இயல்பினர். ஓக்கின்றார்-அவரோடு ஒரு
தன்மையராய்க் காணப்படுகின்றார். ‘‘ஒக்கின்றார்’’என்றதனால் ‘இவரது
இயல்பு அதுவன்று’ என்பது பெறப்பட்டது.


மேல்