சேந்தனார் திருப்பல்லாண்டு
29. கோயில்
296. | சேலும் கயலும் திளைக்குங்கண் ணார்இளங் கொங்கையிற் செங்குங்குமம் போலும் பொடியணி மார்பிலங் கும்மென்று புண்ணியர் போற்றிசைப்ப மாலும் அயனும் அறியா நெறிதந்து வந்தென் மனத்தகத்தே பாலும் அமுதமும் ஒத்துநின் றானுக்கே பல்லாண்டு கூறுதுமே. (8) |
296. சேல், கயல் என்பன மீன்வகை. ‘சேலும் கயலும் போல’ என உவம உருபு விரிக்க. திளைக்கும்-பிறழ்கின்ற. ‘‘குங்குமம்’’ என்றது. குங்குமங் கூடிய சாந்தினை. ‘குங்குமம் போலும் பொடி மார்பின்கண் இலங்கும்’ என்க. அணி-அழகு. சொற்கிடக்கை முறை இவ்வாறாயினும், ‘மார்பிற் பொடி, கொங்கையிற் குங்குமம்போல இலங்கும்’ என்றல் கருத்தென்க. இதனால் இறைவன் மார்பில் உள்ள திருநீறு, |
மங்கையர் கொங்கையில் உள்ள குங்குமம் காமுகரை வசீகரித்தல் போலப் புண்ணியரை வசீகரித்தல் கூறப்பட்டது. புண்ணியர் சிவபுண்ணியத்தின் பயனாகிய சிவஞானத்தைப் பெற்றவர். நெறி, சிவஞானம். வந்து-அழகிய கோலத்துடன் வந்து. இதனை, ‘‘போற்றிசைப்ப’’ என்றதன்பின்னர்க் கூட்டுக. |