சொல்லகராதிச் சுருக்கம் |
3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
13. கங்கைகொண்ட சோளேச்சரம்
134. | உண்ணெகிழ்ந் துடலம் நெக்குமுக் கண்ணா ஓலம்என் றோலமிட் டொருநாள் மண்ணின்நின் றலரேன் ; வழிமொழி மாலை மழலையஞ் சிலம்படி முடிமேற் பண்ணிநின் றுருகேன் ; பணிசெயேன் எனினும், பாவியேன் ஆவியுள் புகுந்தென் கண்ணின்நின் றகலான் என்கொலோ ! கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே. (2) |
134. நெக்கு-குழைந்து. ‘ஒருநாளும்’ என்னும் உம்மை |
மேல் |