சொல்லகராதிச் சுருக்கம்

7. திருவாலியமுதனார் திருவிசைப்பா

23. கோயில்


227.

ஒக்க ஒட்டந்த அந்தியும் மதியமும்
   அலைகடல் ஒலியோடு
நெக்கு வீழ்தரு நெஞ்சினைப் பாய்தலும்
   நிறையழிந் திருப்பேனைச்
செக்கர் மாளிகை சூழ்தரு தில்லையுள்
   திருநடம் வகையாலே
பக்கம் ஓட்டந்த மன்மதன் மலர்க்கணை
   படுந்தொறும் அலந்தேனே.                    (2)
 


227.     ஒக்க ஓட்டந்த-ஒருசேர ஓடிவந்த. அந்தி-மாலைக்  காலம்.
‘மாலைக்  காலமும், சந்திரனும் ஒருசேர ஓடிவந்தன’ என்றான்.  பின்பு,
‘அவை       இரண்டும்       கடல்       ஒலியோடு     சேர்ந்து

நெஞ்சைப்   பிளந்தன’ என்றாள். நெக்கு வீழ்தரு   நெஞ்சு - முன்பே
உடைந்து  அழிந்த  மனம்.  ‘‘பாய்தல்’’ என்றது,  ‘போழ்தல்’ என்னும்
பொருட்டாய்    நின்றது.    நிறை    -     நெஞ்சினைத்   தன்வழி
நிறுத்துந்தன்மை.  ‘‘இருப்பேனை’’ என்றதை,  ‘இருப்பேன்மேல்’ எனத்
திரித்து.  அதனை,  ‘‘படுந்தொறும்’’என்பதனோடு  முடிக்க.  இவ்வாறு
திரியாமலே,  ‘‘பக்கம்  ஓட்டந்த’’  என்பதனை,   ‘அணுகிய’  என்னும்
பொருட்டாக்கி,  அதனோடு  முடித்தலும்  ஆம்.   மூன்றாம்  அடியை
முதலடியின்  பின்னர்க்  கூட்டி  உரைக்க.   பக்கம்  ஓட்டந்த-அருகில்
ஓட்டந்த - அருகில் ஓடிவந்த, அலந்தேன் - வருந்தினேன்.  


மேல்