முதல் தந்திரம்

7.புலால் மறுத்தல்

1பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன் தன் தூதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்து வைப்பாரே.
உரை
   
2கொலையே களவுகள் காமம் பொய் கூறல்
மலைவான பாதகம் ஆம் அவை நீக்கித்
தலை ஆம் சிவன் அடி சார்ந்து இன்பம் சார்ந்தோர்க்கு
இலையாம் இவை ஞான ஆனந்தத்து இருத்தலே.
உரை
   
3கொன்றிலாரைக் கொலச் சொலிக் கூறினார்
தின்றிலாரைத் தினச் சொலித் தெண்டித்தார்
பன்றியாப் படியில் பிறந்து ஏழ் நரகு
ஒன்றிவார் அரன் ஆணையிது உண்மையே.
உரை