தொடக்கம் |
|
|
ஒன்பதாம் தந்திரம் 8. திருக்கூத்துத் தரிசனம் |
1 | எங்கும் திருமேனி எங்கும் சிவ சத்தி எங்கும் சிதம்பரம் எங்கும் திரு நட்டம் எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கு எங்கும் தங்கும் சிவன் அருள் தன் விளையாட்டு அதே. |
|
உரை
|
|
|
|
|
2 | சிற்பரம் சோதி சிவ ஆனந்தக் கூத்தனைச் சொல் பதம் ஆம் அந்தச் சுந்தரக் கூத்தனைப் பொன் பதிக் கூத்தனைப் பொன் தில்லைக் கூத்தனை அற்புதக் கூத்தனை யார் அறிவாரே. |
|
உரை
|
|
|
|
|
1 | தான் அந்தம் இல்லாச் சதானந்த சத்தி மேல் தேன் உந்தும் ஆனந்த மா நடம் கண்டீர் ஞானம் கடந்து நடம் செய்யும் நம்பிக்கு அங்கு ஆனந்தக் கூத்து ஆட ஆட அரங்கு ஆனதே. |
|
உரை
|
|
|
|
|
2 | ஆனந்தம் ஆடு அரங்கம் ஆனந்தம் பாடல்கள் ஆனந்தம் பல் இயம் ஆனந்த வாச்சியம் ஆனந்தம் ஆக அகில சராசரம் ஆனந்தம் ஆனந்தக் கூத்து உகந்தானுக்கே. |
|
உரை
|
|
|
|
|
3 | ஒளி ஆம் பரமும் உளது ஆம் பரமும் அளியார் சிவகாமி ஆகும் சமயக் களியார் பரமும் கருதுறை அந்தத் தெளிவு ஆம் சிவ ஆனந்த நட்டத்தின் சித்தியே. |
|
உரை
|
|
|
|
|
4 | ஆன நடம் ஐந்து அகள சகளத்தர் ஆன நடம் ஆடி ஐங் கருமத்து ஆக ஆன தொழில் அருளால் ஐந் தொழில் செய்தே தேன் மொழி பாகன் திரு நடம் ஆடுமே. |
|
உரை
|
|
|
|
|
5 | பூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகாண்ட மூதாண்ட முத்தாண்ட மோகாண்ட தேகாண்ட தாகாண்ட ஐங் கருமத்து ஆண்ட தற்பரம் தேகாந்தம் ஆம் பிரமாண்டத்த என்பவே. |
|
உரை
|
|
|
|
|
6 | வேதங்கள் ஆட மிகு ஆகமம் ஆடக் கீதங்கள் ஆடக் கிளர் அண்டம் ஏழ் ஆடப் பூதங்கள் ஆடப் புவனம் முழுது ஆட நாதம் கொண்டு ஆடினான் ஞான ஆனந்தக் கூத்தே. |
|
உரை
|
|
|
|
|
7 | பூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகாண்ட மூதாண்ட முத்தாண்ட மோகாண்ட தேகாண்ட தாகாண்ட மைங்கரு மத்தாண்ட தற்பரத்து ஏகாந்தமாம் பிரமாண்டத்த என்பவே. |
|
உரை
|
|
|
|
|
8 | வேதங்கள் ஓட மிகு ஆகமம் ஆடக் கீதங்கள் ஆடக் கிளர் அண்டம் ஏழு ஆடப் பூதங்கள் ஆடப் புவன முழுது ஆட நாதம் கொண்டு ஆடினான் ஞானானந்தக் கூத்தே. |
|
உரை
|
|
|
|
|
9 | பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன் ஐந்தில் வேதங்கள் ஐந்தின் மிகும் ஆகமம் தன்னில் ஓதும் கலை காலம் ஊழியுடன் அண்டப் போதங்கள் ஐந்தில் புணர்ந்து ஆடும் சித்தனே. |
|
உரை
|
|
|
|
|
10 | தேவர் சுரர் நரர் சித்தர் வித்தியா தரர் மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள் தாபதர் சத்தர் சமயம் சரா சரம் யாவையும் ஆடிடும் எம் இறை ஆடவே. |
|
உரை
|
|
|
|
|
1 | அண்டங்கள் ஏழினுக்கு அப்புறத்து அப்பால் உண்டு என்ற சத்தி சதா சிவத்து உச்சி மேல் கண்டம் கரியான் கருணை திரு உருக் கொண்டு அங்கு உமை காணக் கூத்து உகந்தானே. |
|
உரை
|
|
|
|
|
2 | கொடு கொட்டி பாண்டரம் கோடு சங்கார நடம் எட்டோடு ஐந்து ஆறு நாடி உள் நாடும் திடம் உற்று எழும் தேவ தாரு ஆம் தில்லை வடம் உற்றமாவனம் மன்னவன் தானே. |
|
உரை
|
|
|
|
|
3 | பரமாண்டத்து ஊடே பரா சத்தி பாதம் பரமாண்டத்து ஊடே படர் ஒளி ஈசன் பரமாண்டத்து ஊடே படர் தரு நாதம் பரமாண்டத்து ஊடே பரன் நடம் ஆடுமே. |
|
உரை
|
|
|
|
|
4 | அங்குசம் என்ன எழு மார்க்கம் போதத்தில் தங்கியது ஒந்தி எனும் தாள ஒத்தினில் சங்கரன் மூல நாடிக்குள் தரித்து ஆடல் பொங்கிய காலம் புகும் போகல் இல்லையே. |
|
உரை
|
|
|
|
|
5 | ஆனத்து ஆடிப் பின் நவக் கூத்து ஆடிக் கானத்து ஆடிக் கருத்தில் தரித்து ஆடி மூனச் சுழுனையுள் ஆடி முடிவு இல்லா ஞானத்துள் ஆடி முடித்தான் என் நாதனே. |
|
உரை
|
|
|
|
|
6 | சத்திகள் ஐந்தும் சிவ பேதம் தான் ஐந்தும் முத்திகள் எட்டும் முதல் ஆம் பதம் எட்டும் சித்திகள் எட்டும் சிவ பதம் தான் எட்டும் சுத்திகள் எட்டு ஈசன் தொல் நடம் ஆடுமே. |
|
உரை
|
|
|
|
|
7 | மேகங்கள் ஏழும் விரி கடல் தீவு ஏழும் தேகங்கள் ஏழும் சிவ பாற் கரன் ஏழும் தாகங்கள் ஏழும் சாந்திகள் ஏழும் ஆகின்ற நந்தி அடிக் கீழ் அடங்குமே. |
|
உரை
|
|
|
|
|
1 | தெற்கு வடக்குக் கிழக்கு மேற்கு உச்சியில் அற்புதம் ஆனது ஓர் அஞ்சு முகத்திலும் ஒப்பு இல் பேர் இன்பத்து உபய உபயத்துள் தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே. |
|
உரை
|
|
|
|
|
2 | அடியார் அரன் அடி ஆனந்தம் கண்டோர் அடியார் ஆனவர் அத்தர் அருள் உற்றோர் அடியார் பவரே அடியவர் ஆம் ஆல் அடியார் பொன் அம்பலத்து ஆடல் கண்டாரே. |
|
உரை
|
|
|
|
|
3 | அடங்காத என்னை அடக்கி அடி வைத்து இடம் காண் பர ஆனந்தத்தே என்னை இட்டு நடந்தான் செயும் நந்தி நல் ஞானக் கூத்தன் படம்தான் செய்து உள் உடனே படிந்து இருந்தானே. |
|
உரை
|
|
|
|
|
4 | உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனைச் செம்பொன் திரு மன்றுள் சேவகக் கூத்தனைச் சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை இன்பு உற நாடி என் அன்பில் வைத்தேனே. |
|
உரை
|
|
|
|
|
5 | மாணிக்கக் கூத்தனை வண் தில்லைக் கூத்தனைப் பூண் உற்ற மன்றுள் புரிசடைக் கூத்தனைச் சேண் உற்ற சோதிச் சிவ ஆனந்தக் கூத்தனை ஆணிப் பொன் கூத்தனை யார் உரைப் பாரே. |
|
உரை
|
|
|
|
|
6 | விம்மும் வெருவும் விழும் எழும் மெய் சோரும் தம்மையும் தாம் அறியார்கள் சதுர் கெடும் செம்மை சிறந்த திரு அம்பலக் கூத்துள் அம் மலர்ப் பொன் பாதத்து அன்பு வைப்பார் கட்கே. |
|
உரை
|
|
|
|
|
7 | தேட்டு அறும் சிந்தை திகைப்பு அறும் பிண்டத்து உள் வாட்டு அறும் கால் புந்தி ஆகி வரும் புலன் ஓட்டு அறும் ஆசை அறும் உளத்து ஆனந்த நாட்டம் உறும் குறு நாடகம் காணவே. |
|
உரை
|
|
|
|
|
8 | காளியோடு ஆடிக் கனகா சலத்து ஆடிக் கூளியோடு ஆடிக் குவலயத்தே ஆடி நீடிய நீர் தீ கால் நீள் வான் இடை ஆடி நாள் உற அம்பலத்தே ஆடும் நாதனே. |
|
உரை
|
|
|
|
|
9 | மேரு நடு நாடி மிக்கு இடை பிங்கலை கூரும் இவ் வானின் இலங்கைக் குறி உறும் சாரும் திலை வனத் தண் மா மலையத்து ஊடு ஏறும் சுழுனை இவை சிவ பூமியே. |
|
உரை
|
|
|
|
|
1 | பூதல மேருப் புறத்து ஆன தெக்கணம் ஓதும் இடை பிங்கலை ஒண் சுழுனை ஆம் பாதி மதியோன் பயில் திரு அம்பலம் ஏதம் இல் பூதாண்டத்து எல்லையின் ஈறே. |
|
உரை
|
|
|
|
|
2 | அண்டங்கள் ஓர் ஏழும் அம் பொன் பதி ஆகப் பண்டை ஆகாசங்கள் ஐந்தும் பதி ஆகத் தெண்டினில் சத்தி திரு அம்பலம் ஆகக் கொண்டு பரம் சோதி கூத்து உகந்தானே. |
|
உரை
|
|
|
|
|
3 | குரானந்த ரேகையாய்க் கூர்ந்த குணம் ஆம் சிரானந்தம் பூரித்துத் தென் திசை சேர்ந்து புரானந்த போகனாய்ப் பூவையும் தானும் நிரானந்தம் ஆகி நிருத்தம் செய்தானே. |
|
உரை
|
|
|
|
|
4 | ஆதி பரன் ஆட அங் கைக் கனல் ஆட ஓதும் சடை ஆட உன்மத்தம் உற்று ஆடப் பாதி மதி ஆடப் பார் அண்டம் மீது ஆட நாத மோடு ஆடினான் நாத அந்த நட்டமே. |
|
உரை
|
|
|
|
|
5 | கும்பிட அம்பலத்து ஆடிய கோன் நடம் அம்பரன் ஆடும் அகிலாண்ட நட்டம் ஆம் செம் பொருளாகும் சிவலோகம் சேர்ந்து உற்றால் உம்பர மோன ஞான அந்தத்தில் உண்மையே. |
|
உரை
|
|
|
|
|
6 | மேதினி மூ ஏழ் மிகும் அண்டம் ஓர் ஏழு சாதகம் ஆகும் சமயங்கள் நூற்று எட்டு நாதமோடு அந்த நடானந்த நாற்பதப் பாதியோடு ஆடிப் பரன் இரு பாதமே. |
|
உரை
|
|
|
|
|
7 | இடை பிங்கலை இம வானோடு இலங்கை நடு நின்ற மேரு நடு ஆம் சுழுனை கடவும் திலை வனம் கை கண்ட மூலம் படர் ஒன்றி என்னும் பரம் ஆம் பரமே. |
|
உரை
|
|
|
|
|
8 | ஈறு ஆன கன்னி குமரியே காவிரி வேறா நவ தீர்த்தம் மிக்கு உள்ள வெற்பு ஏழுள் பேறு ஆன வேத ஆகமமே பிறத்தலான் மாறாத தென் திசை வையகம் சுத்தமே. |
|
உரை
|
|
|
|
|
9 | நாதத்தினில் ஆடி நார் பதத்தே ஆடி வேதத்தில் ஆடித் தழல் அந்தம் மீது ஆடி போதத்தில் ஆடிப் புவனம் முழுதும் ஆடும் தீது அற்ற தேவாதி தேவர் பிரானே. |
|
உரை
|
|
|
|
|
10 | தேவரோடு ஆடித் திரு அம்பலத்து ஆடி மூவரோடு ஆடி முனி சனத்தோடு ஆடிப் பாவின் உள் ஆடிப் பரா சத்தியில் ஆடிக் கோவின் உள் ஆடிடும் கூத்த பிரானே. |
|
உரை
|
|
|
|
|
11 | ஆறு முகத்தில் அதிபதி நான் என்றும் கூறு சமயக் குருபரன் நான் என்றும் தேறினர் தெற்குத் திரு அம்பலத்து உள்ளே வேறு இன்றி அண்ணல் விளங்கி நின்றானே. |
|
உரை
|
|
|
|
|
12 | அம்பலம் ஆடு அரங்கு ஆக அதன் மீதே எம் பரன் ஆடும் இரு தாளின் ஈர் ஒளி உம் பரம் ஆம் ஐந்து நாதத்து ரேகையுள் தம் பதம் ஆய் நின்று தான் வந்து அருளுமே. |
|
உரை
|
|
|
|
|
13 | ஆடிய காலும் அதில் சிலம்பு ஓசையும் பாடிய பாட்டும் பல ஆன நட்டமும் கூடிய கோலம் குருபரன் கொண்டு ஆடத் தேடி உளே கண்டு தீர்ந்து அற்ற வாறே. |
|
உரை
|
|
|
|
|
14 | இருதயம் தன்னில் எழுந்த பிராணன் கர சரண் ஆதி கலக்கும் படியே அர தனம் மன்றினின் மாணிக்கக் கூத்தன் குரவனாய் எங்கணும் கூத்து உகந்தானே. |
|
உரை
|
|
|
|
|
1 | குரு உரு அன்றிக் குனிக்கும் உருவம் அரு உரு ஆவதும் அந்த அருவே திரிபுரை ஆகித் திகழ் தரு வாளும் உரு அருவு ஆகும் உமை அவள் தானே. |
|
உரை
|
|
|
|
|
2 | திரு வழி ஆவது சிற்றம் பலத்தே குரு வடிவு உள்ளாக் குனிக்கும் உருவே உருவு அருவு ஆவது முற்றும் உணர்ந்தோர்க்கு அருள் வழி ஆவதும் அவ்வழி தானே. |
|
உரை
|
|
|
|
|
3 | நீரும் சிரசு இடை பன்னிரண்டு அங்குலம் ஓடும் உயிர் எழுத்து ஓங்கி உதித்திட நாடு மின் நாத அந்த நம் பெருமான் உகந்து ஆடும் இடம் திரு அம்பலம் தானே. |
|
உரை
|
|
|
|
|
4 | வளி மேக மின் வில்லு வானக ஓசை தெளிய விசும்பில் திகழ்தரு வாறு போல் களி ஒளி ஆறும் கலந்து உடன் வேறாய் ஒளி உரு ஆகி ஒளித்து நின்றானே. |
|
உரை
|
|
|
|
|
5 | தீ முதல் ஐந்தும் திசை எட்டும் கீழ் மேலும் ஆயும் அறிவினுக்கு அப்புறம் ஆனந்தம் மாயை மா மாயை கடந்து நின்றார் காண நாயகன் நின்று நடம் செய்யும் ஆறே. |
|
உரை
|
|
|
|
|
6 | கூத்தன் கலந்திடும் கோல் வளையா ளொடும் கூத்தன் கலந்திடும் கோது இலா ஆனந்தம் கூத்தன் கலந்திடும் கோது இலா ஞானத்துக் கூத்தனும் கூத்தியும் கூத்து அதின் மேலே. |
|
உரை
|
|
|
|
|
7 | இடம் கொண்ட சத்தியும் எந்தை பிரானும் நடம் கொண்டு நின்றமை நானும் அறிந்தேன் படம் கொடு நின்ற இப் பல் உயிர்க்கு எல்லாம் அடங்கலும் தாம் ஆய் நின்று ஆடு கின்றாரே. |
|
உரை
|
|
|
|
|
8 | சத்தி வடிவு சகல ஆனந்தமும் ஒத்த ஆனந்தம் உமை அவள் மேனி ஆம் சத்தி வடிவு சகளத்து எழும் திரண்டு ஒத்த ஆனந்தம் ஒரு நடம் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
9 | நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி உற்று உற்றுப் பார்க்க ஒளி விடும் மந்திரம் பற்றுக்குப் பற்று ஆய்ப் பரமன் இருந் திடம் சிற்றம் பலம் என்று சேர்ந்து கொண்டேனே. |
|
உரை
|
|
|
|
|
10 | அண்டங்கள் தத்துவம் ஆகிச் சதா சிவம் தண்டினில் சாத்தவி சாம்பவி ஆதனம் தெண்டினில் ஏழும் சிவ ஆசனம் ஆகவே கொண்டு பரஞ்சோதி கூத்து உகந்தானே. |
|
உரை
|
|
|
|
|
11 | மன்று நிறைந்த விளக்கு ஒளி மா மலர் நன்று இது தான் இதழ் நாலொடு நூறு அவை சென்றது தான் ஒரு பத்து இரு நூறு உள நின்றது தான் நெடு மண்டலம் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
12 | அண்டம் எழு கோடி பிண்டம் எழு கோடி தெண் திரை சூழ்ந்த திசைகள் எழு கோடி எண் திசை சூழ்ந்த இலிங்கம் எழு கோடி அண்ட நடம் செயும் ஆலயம் தானே. |
|
உரை
|
|
|
|
|
13 | ஆகாசம் ஆம் உடல் அலங்கார் முயலகன் ஏகாசம் ஆம் திசை எட்டும் திருக்கை கள் மோகாய முக் கண்கள் மூன்று ஒளி தான் ஆக மாகாய மன்றுள் நடம் செய் கின்றானே. |
|
உரை
|
|
|
|
|
14 | அம்பலம் ஆவது அகில சரா சரம் அம்பலம் ஆவது ஆதிப் பிரான் அடி அம்பலம் ஆவது அப்புத் தீ மண்டலம் அம்பலம் ஆவது அஞ்சு எழுத்து ஆமே. |
|
உரை
|
|
|
|
|
15 | கூடிய திண் முழவம் குழலோம் என்று ஆடிய மானுடர் ஆதிப் பிரான் என்ன நாடி நல் கணம் ஆர் அம்பல் பூதங்கள் பாடிய வாறு ஒரு பாண்டரங்கம் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
16 | அண்டத்தில் தேவர்கள் அப்பாலைத் தேவர்கள் தெண் திரை சூழ் புவிக்கு உள் உள்ள தேவர்கள் புண்டரிகப் பதப் பொன் அம்பலக் கூத்துக் கண்டு சேவித்துக் கதி பெறுவார் களே. |
|
உரை
|
|
|
|
|
17 | புளிக் கண்டவர்க்குப் புனல் ஊறு மா போல் களிக்கும் திருக் கூத்துக் கண்டவர்க்கு எல்லாம் அளிக்கும் அருள் கண்ணீர் சோர் நெஞ்சு உருக்கும் ஒளிக்குள் ஆனந்தத்து அமுது ஊறும் உள்ளத்தே. |
|
உரை
|
|
|
|
|
18 | திண்டாடி வீழ்கை சிவ ஆனந்தம் ஆவது உண்டார்க்கு உணவு உண்டால் உன்மத்தம் சித்திக்கும் கொண்டாடு மன்றுள் குனிக்கும் திருக்கூத்துக் கண்டார் வரும் குணம் கேட்டார்க்கும் ஒக்குமே. |
|
உரை
|
|
|
|
|
19 | அங்கி தமருகம் அக்கு மாலை பாசம் அங்குசம் சூலம் கபாலமுடன் ஞானம் தங்கு பயம் தரு நீலமும் உடன் மங்கை யோர் பாகம் ஆய் நடம் ஆடுமே. |
|
உரை
|
|
|
|
|
20 | ஆடல் பதினோர் உறுப்பும் அடைவு ஆகக் கூடிய பாதம் சிலம்பு கைக் கொள் துடி நீடியநாதம் பரால் பர நேயத்தே ஆடிய நந்தி புறம் அகத்தானே. |
|
உரை
|
|
|
|
|
21 | ஒன்பதும் ஆட ஒரு பதினாறு ஆட அன்பு உறு மார்க்கங்கள் ஆறும் உடன் ஆட இன்பு உறும் ஏழினும் ஏழ் ஐம் பத்து ஆறு ஆட அன்பதும் ஆடினான் ஆனந்தக் கூத்தே. |
|
உரை
|
|
|
|
|
22 | ஏழினில் ஏழாய் இகந்து எழுத்து ஏழதாய் ஏழினில் ஒன்றாய் இழிந்து அமைந்து ஒன்றாகி ஏழினில் சன்மார்க்கம் எங்கள் பரம் சோதி ஏழ் இசை நாடகத்தே இசைந்தானே. |
|
உரை
|
|
|
|
|
23 | மூன்றினில் அஞ்சாகி முந்நூற்று அறுபதாய் மூன்றினில் ஆறாய் முதல் பன்னீர் மூலமாய் மூன்றினில் அக்க முடிவு ஆகி முந்தியே மூன்றிலும் ஆடினான் மோகாந்தக் கூத்தே. |
|
உரை
|
|
|
|
|
24 | தாம் முடி வானவர் தம் முடி மேல் உறை மா மணி ஈசன் மலர் அடித் தாள் இணை வா மணி அன்பு உடையார் மனத்து உள் எழும் கா மணி ஞாலம் கடந்து நின்றானே. |
|
உரை
|
|
|
|
|
25 | புரிந்தவன் ஆடில் புவனங் களோடும் தெரிந்தவன் ஆடும் அளவு எங்கள் சிந்தை புரிந்தவன் ஆடில் பல் பூதங்கள் ஆடும் எரிந்தவன் ஆடல் கண்டு இன்புற்ற வாறே. |
|
உரை
|
|
|
|
|
26 | ஆதி நடம் செய்தான் என்பர்கள் ஆதர்கள் ஆதி நடம் செய்கை யாரும் அறிகிலர் ஆதி நடம் ஆடல் ஆரும் அறிந்தபின் ஆதி நடம் ஆடல் ஆம் அருள் சத்தியே. |
|
உரை
|
|
|
|
|
27 | ஒன்பதோடு ஒன்பது ஆம் உற்ற இருபதத்து அன்பு உறு கோணம் அசி பதத்து ஆடிடத் துன்பு உறு சத்தியுள் தோன்றி நின்று ஆடவே அன்பு உறு எந்தை நின்று ஆடல் உற்றானே. |
|
உரை
|
|
|
|
|
28 | தத்துவம் ஆடச் சதாசிவம் தான் ஆடச் சித்தமும் ஆடச் சிவ சத்தி தான் ஆட வைத்த சரா சரம் ஆட மறை ஆட அத்தனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே. |
|
உரை
|
|
|
|
|
29 | இருவரும் காண எழில் அம்பலத்தே உருவோடு அருவோடு உருபர ரூபமாய்த் திரு அருள் சத்திக்குள் சித்தன் ஆனந்தன் அருள் உரு ஆக நின்று ஆடல் உற்றானே. |
|
உரை
|
|
|
|
|
30 | சிவம் ஆடச் சத்தியும் ஆடச் சகத்தில் அவம் ஆட ஆடாத அம்பரம் ஆட நவம் ஆன தத்துவ நாத அந்தம் ஆடச் சிவம் ஆடும் வேத அந்தச் சித்தாந்தத்து உள்ளே. |
|
உரை
|
|
|
|
|
31 | நாதத்தின் அந்தமும் நால் போத அந்தமும் வேதத்தின் அந்தமும் மெய்ச் சிவ ஆனந்தமும் தாது அற்ற நல்ல சதா சிவ ஆனந்தத்து நாதப் பிரமம் சிவ நடம் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
32 | சிவம் ஆதி ஐவர் திண்டாட்டமும் தீரத் தவம் ஆர் பசு பாசம் ஆங்கே தனித்துத் தவம் ஆம் பரன் எங்கும் தான் ஆக ஆடும் தவம் ஆம் சிவ ஆனந்தத் தோர் ஞானக் கூத்தே. |
|
உரை
|
|
|
|
|
33 | கூடி நின்றான் ஒரு காலத்துத் தேவர்கள் வீட நின்றான் விகிர்தா என்னும் நாமத்தைத் தேட நின்றான் திகழும் சுடர் மூன்று ஒளி ஆட நின்றான் என்னை ஆள் கொண்ட வாறே. |
|
உரை
|
|
|
|
|
34 | நாதத்துவம் கடந்து ஆதி மறை நம்பி பூதத்துவத்தே பொலிந்து இன்பம் எய்தினர் நேதத்துவமும் அவற்றொடு நேதியும் பேதப் படா வண்ணம் பின்னி நின்றானே. |
|
உரை
|
|
|
|
|
35 | ஆனந்தம் ஆனந்தம் என்பர் அறிவு இலர் ஆனந்த மா நடம் ஆரும் அறிகிலர் ஆனந்த மா நடம் ஆரும் அறிந்த பின் தான் அந்தம் அற்றிடம் ஆனந்தம் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
36 | திருந்து நல் என்று உதறிய கையும் அரும் தவர் வா என்று அணைத்த மலர்க் கையும் பொருந்தில் இமைப் பிலி அவ் என்ற பொன் கையும் திருந்தத் தீ ஆகும் திரு நிலை மவ்வே. |
|
உரை
|
|
|
|
|
37 | மருவம் துடியுடன் மன்னிய வீச்சு மருவிய அப்பும் அனலுடன் கையும் கருவின் மிதித்த கமலப் பதமும் உருவில் சிவாய நம என ஓதே. |
|
உரை
|
|
|
|
|
38 | அரன் துடி தோற்றம் அமைத்தல் திதி ஆம் அரன் அங்கி தன்னில் அறையில் சங்காரம் அரன் உற்று அணைப்பில் அமரும் திரோதாயி அரன் அடி என்றும் அனுக் கிரகம் என்னே. |
|
உரை
|
|
|
|
|
39 | தீத் திரள் சோதி திகழ் ஒளி உள் ஒளி கூத்தனைக் கண்ட அக் கோமளக் கண்ணினள் மூர்த்திகள் மூவர் முதல்வன் இடை செல்லப் பார்த்தனள் வேதங்கள் பாடினள் தானே. |
|
உரை
|
|
|
|
|
40 | நந்தியை எந்தையை ஞானத் தலைவனை மந்திரம் ஒன்றுள் மருவி அது கடந்து அந்தர வானத்தின் அப்புறத்து அப்பர சுந்தரக் கூத்தனை என் சொல்லும் ஆறே. |
|
உரை
|
|
|
|
|
41 | சீய குரு நந்தி திரு அம்பலத்திலே ஆய் உறு மேனியை யாரும் அறிகிலர் தீய் உறு செம்மை வெளுப் பொடு அத் தன்மை ஆய் உறு மேனி அணை புகல் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
42 | தான் ஆன சத்தியும் தற்பரை ஆய் நிற்கும் தான் ஆம் பரற்கும் உயிர்க்கும் தகும் இச்சை ஞான ஆதி பேத நடத்து நடித்து அருள் ஆனால் அரன் அடி நேயத்தம் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
43 | பத்தி விதையில் பயிர் ஒன்று நாணத்தைச் சித்தி தரு வயிராக்கத்தால் செய்து அறுத்து உய்த்த சமாதி சிவானந்தம் உண்டிடச் சித்தி திகழ் முத்தி யானந்தம் சித்தியே. |
|
உரை
|
|
|
|