| தொடக்கம் |
|
|
|
|
| 1 | செற்றில் என் சீவில் என் செஞ் சாந்து அணியில் என் மத்தகத்தே உளி நாட்டி மறிக்கில் என் வித்தகன் நந்தி விதிவழி அல்லது தத்துவ ஞானிகள் தன்மை குன்றாரே. |
|
உரை
|
| |
|
|
|
|
| 2 | தான் முன்னம் செய்த விதி வழி தான் அல்லால் வான் முன்னம் செய்து அங்கு வைத்தது ஓர் மாட்டு இல்லை கோன் முன்னம் சென்னி குறிவழியே சென்று நான் முன்னம் செய்ததே நல் நிலம் ஆனதே. |
|
உரை
|
| |
|
|
|
|
| 3 | ஆறு இட்ட நுண் மணல் ஆறே சுமவாதே கூறு இட்டுக் கொண்டு சுமந்து அறிவார் இல்லை நீறு இட்ட மேனி நிமிர் சடை நந்தியைப் பேறு இட்ட என் உள்ளம் பிரிய கிலாவே. |
|
உரை
|
| |
|
|
|
|
| 4 | வான் நின்று இடிக்கில் என் மா கடல் பொங்கில் என் கான் நின்ற செந் தீக் கலந்து உடன் வேகில் என் தான் ஒன்றி மாருதம் சண்டம் அடிக்கில் என் நான் ஒன்றி நாதனை நாடுவேன் நானே. |
|
உரை
|
| |
|
|
|
|
| 5 | ஆனை துரக்கில் என் அம்பு ஊடு அறுக்கில் என் கானத்து உழுவை கலந்து வளைக்கில் என் ஏனைப் பதியினில் எம் பெருமான் வைத்த ஞானத்து உழவினை நான் உழுவேனே. |
|
உரை
|
| |
|
|
|
|
| 6 | கூடு கெடின் மற்று ஓர் கூடு செய்வான் உளன் நாடு கெடினும் நமர் கெடுவார் இல்லை வீடு கெடின் மற்று ஓர் வீடு புக்கால் ஒக்கும் பாடது நந்தி பரிசு அறிவார்க்கே. |
|
உரை
|
| |
|
|