104.
|
அளவிறொல்
கலைகண் முற்றி யரும்பெறற் றந்தை
மிக்க |
|
|
வுளமகிழ்
காதல் கூர வோங்கிய குணத்தா னீடி
யிளவர சென்னுந் தன்மை யெய்துதற் கணிய னாகி
வளரிளம் பரிதி போன்று வாழுநா ளொருநாண்
மைந்தன். |
19 |
(இ-ள்.)
அளவில்...முற்றி - (மேற்கூறிய) எல்லையில்லாத
பழமையான கலைகள் எல்லாம் நிரம்பப் பெற்றவனாய்;
அரும்பெறல்...கூர - பெறலரும் தந்தையார் மனம் மகிழும் மிக்க
ஆசை வளரும்படியாக; ஓங்கிய...நீடி - மேன்மேல் வளரும்
நற்குணங்களால் நிறைந்தவனாய்; இளவரசு...ஆகி - இளவரசனாம்
தகுதியை அடையும் பக்குவம் உடையவனாகி; வளர்...மைந்தன்
- ஒளிவளர்கின்ற உதய சூரியன்போன்று வாழ்கிற அந்நாள்களில்
ஒருநாள் அம்மைந்தனானவன் -
(வி-ரை.)
இப்பாட்டில் வரும் மைந்தன் என்னும் எழுவாய்
வரும்பாட்டிற் போந்தான் என்னும் வினைமுற்றோடு முடிந்தது.
அளவில் தொல் கலைகள்
- மேற்கூறிய தெய்வக்கலைகளும்
தொழிற் கலைகளும்.
முற்றி - மேலே கூறியபடி ஓதியும் கற்றும்
நிறைவை
அடைந்து, இளவரசராய் நிற்கும் தகுதிபெற முற்றி என்க.
அருள் பெறல் தந்தை - மேல் 17-ம் பாட்டில்
“தவத்தால்“
என்பதற்கேற்பக் கூறினார். தந்தையும் மைந்தனும் ஒருவர்க்கொருவர்
செய்தபேறு இவ்வாறு குறிக்கப்பெற்றது.
“இவன்றந்தை யென்னோற்றான் கொல்...“
என்ற திருக்குறளும்
இங்கு வைத்துக் காண்க.
காதல் கூர - குணத்தால்
நீடி - குணம் நீடுதலால் காதல்
கூர்ந்து மிக்கது - எனக் காரண காரியமாகக் கொள்க. நீடுதல் -
காரணம். மிகுதல் - காரியம்.
இளவர சென்னுந் தன்மை
- இளவரசென்பது அரசனுக்கு
அடுத்த நிலையில் ஆட்சிக் குரியதொரு பதவி. அரசு தாங்குதற்குரிய
எல்லாத் தன்மைகளும் நிரம்பப்பெற்ற பின்னரே இளவரசு என்கிற
பதவி வழங்கப்பெறும். கண்ணப்ப நாயனார் புராணம்,
“...
அடற்சிலை ஆண்மை முற்றக் கற்றனன் ...“ |
(41) |
“வண்ண
வெஞ்சிலையும் மற்றப் படைகளும் மலரக்
கற்றுக்
கண்ணகன் சாயல்பொங்கக் கலைவளர் திங்க
ளேபோல்
எண்ணிரண் டாண்டின் செவ்வி யெத்தினார் ...“ |
(42) |
என்ற திருப்பாட்டுக்களையும்,
அப்பருவத்தே அவர்க்கு நாகன்
பட்டம் சூட்டுதலையும் இங்கு நினைவு கூர்க. இளவரசுக்குரிய
பருவம் விதிக்கப்பெற்றதும் காண்க.
வளரிளம் பரிதி
- சந்திரனை உவமித்தால், அவன் ஒருகாற்
குறைவன் - ஒருகால் மிகுவன் - ஆதலின் இளம்பரிதிபோன்று
என்றார். மேலும் இம்மைந்தன் “துன்னு வெங்கதிரோன்
வழித்தோன்றல்“ என்று முன்னர்க் கூறியபடி, சூரிய மரபில்
முளைத்தவன் ஆதலும் குறிக்கப் பெற்றதாம். இளம்பரிதி -
உதய
ஞாயிறு.
வளர் -
வளர்தற்கு ஒளி என்ற எழுவாய் வருவிக்கப்பட்டது.
“சேய இளம் பரிதியென“ என்ற திருவிளையாடற் புராணமும் காண்க.
ஒருநாள்
- அவன் வாழ்நாளில் இது ஒப்பற்ற ஒரு தனித்த
நாளாயிற்று என்க. 19
|
|
|
|