154.
|
குலமுத
லறிவின் மிக்கார் கோத்திர முறையுந்
தேர்ந்தார் |
|
|
நலமிகு
முதியோர் சொல்லச் சடங்கவி நன்மை
யேற்று
மலர்தரு முகத்த னாகி மணம்புரி செயலின் வாய்மை
பலவுடன் பேசி யொத்த பண்பினா லன்பு
நேர்ந்தான். |
8 |
(இ-ள்.)
வெளிப்படை. குலம் - குடி முதலிய அறிவுகளிற்
சிறந்த முதியோர் அவ்வாறே சென்று சடையனார் சொல்லிய
மணத்திறத்தை அறிவிப்ப, அந்நன்மையை ஏற்றுக்கொண்டவராய்ச்
சடங்கவி சிவாசாரியர் முகமலர்ச்சியுடன் மணத்திற்கு
வேண்டுவனவாகிய பல உண்மைகளையும் பேசி ஒப்புமை
பெற்றதனாலே தம் மகனை மணஞ்செய்து தருவதாக அன்புடன்
இசைந்தார்.
(வி-ரை.) குலமுதல்
அறிவு - குலத்திற் கின்றியமையாத
அறிவு. குலம் முதலியவற்றின் அறிவு என்றுமாம்.
கோத்திரமுறை - கோத்திரம்
- குலத்தின் உட்பிரிவு.
அதன் முறை - மணஞ்செய் கோத்திரமும் கிளைக்கோத்திரமும்
பிரவரமும் அவை அல்லாதவாறும். கோத்திரமும் பிறமுறைகளையும்
என்றும் கூறுவர்.
நலமிகுமுதியோர் - இருதிறத்தார்க்கும்
நன்மை மிகும்படிச்
செய்வோர். மிகும் - மிகுவிக்கும் எனப் பிறவினைப்
பொருளில்
வந்தது. மிக்கோரும் தேர்ந்தோரும் ஆகிய முதியோர் என்க.
இந்நாளிலே கைக்கூலிக்காக ஒருபுடை பேசும் கலியாணத்தரகர்
அந்நாளில் இலர்.
நன்மை ஏற்றல் - மனத்தின் செய்கை.
மலர்தருமுகம் -
அதுகாரணமாகப் புறத்தில் நிகழும் மெய்ப்பாடு. ஏற்று
- (சொல்லின்
நன்மையை) யங்கீகரித்து.
மணம்புரி செயலின் வாய்மை பல பெயர் - கணம் - நூல்
முதலியவாக விதித்த மணப் பொருத்தங்களும் நிமித்தம் முதலிய
பிறவுமாம்.
ஒத்த பண்பு -
அவை வாய்மை விதிக்கு மாறுபடாது
இணங்கியிருத்தல்.
அன்புநேர்ந்தான்
- அன்புநிகழும்மணச்செயலுக்கு
இசைந்தான் என்றலுமாம்.
அறிவின்மிக்க - அறிவுமிக்க
- என்பனவும் பாடம். 8
|
|
|
|