155.
|
மற்றவ
னிசைந்த வார்த்தை கேட்டவர் வள்ள
றன்னைப் |
|
|
பெற்றவர்
தம்பாற் சென்று சொன்னபின் பெருகு
சிந்தை
யுற்றதோர் மகிழ்ச்சி யெய்தி மணவினை யுவந்து
சாற்றிக்
கொற்றவர் திருவுக் கேற்பத் குறித்தநா ளோலை
விட்டார்.
|
9 |
(இ-ள்.)
வெளிப்படை. இசைந்ததனை அவ்வாறு கேட்ட
முதியோர் ஆரூரரைப் பெற்றோரிடம் சென்று அறிவித்தனர். அவர்
மனமிக மகிழ்ந்து, ஆரூரர் காதற் றந்தையாகிய அரசர் சிறப்புக்
கேற்றபடி திருமணத்தை அறிவிக்குமாறு குறித்து எழுதிய
நாளோலையைப் பெண் வீட்டாருக்கு அனுப்பினார்கள்.
(வி-ரை.)
கேட்டவர் - மணத்திறம் செப்பிப் பெண்கேட்க
வந்தவர். இந்த வார்த்தையை நேரே கேட்டவர் என்றலுமாம்.
வள்ளல்
- நம்பிஆரூரர். தென்றிசை வாழ்ந்திடவும்
தீதகன்றுலகமுய்யுவும் தேவார அருண்மொழிகளை வரையாது
கொடுப்பவர். உலகமுய்யும் வழிகளை அருள்பவர்.
கொற்றவர் திருவுக்கேற்பக்
குறித்த - நாளோலையிற்
குறித்த பொருள்கள் நம்பியாரூரரைப் பெற்ற சடையனாரது மரபுக்
கேற்பனவோ? அன்றிக் காதற்றந்தையாகிய நரசிங்கமுனையரையர்
தகுதிக் கேற்பனவோ என்று ஐயம் நிகழ்த்துவோரை நோக்கி
இவ்வாறு கூறினார்.
நாளோலை
- ஒரு சொல் நீர்மைத்தாய் மணநாளும் ஓரையும்
குறித்தெழுதிய ஓலையைக் குறித்தது. இது மணமகன் வீட்டார்
மணமகள் வீட்டார்க்கும் எழுதுவது. இவற்றின் விரிவைத்
திருஞானசம்பந்த நாயனார் புராணத்துட் காண்க.
குறித்த
- நாள் குறித்து. நாள் ஓலை என்று பிரித்து, ஓலை
குறித்து என்றும் அரசர் திருவுக்கேற்ப நாள் என்றும் கூட்டி உரை கூறுவாருமுளர்.
குறித்துநாள்
- என்பதும் பாடம். 9
|
|
|
|