160. |
காலைசெய்
வினைகண் முற்றிக் கணிதநூற் புலவர்
சொன்ன
வேலைவந் தணையு முன்னர் விதிமணக் கோலங்
கொள்வான்
|
|
|
நூலசைந்
திலங்கு மார்பி னுணங்கிய கேள்வி
மேலோன்
மாலையுந் தாரும் பொங்க மஞ்சன சாலை புக்கான். |
14 |
(இ-ள்.)
வெளிப்படை. காலைக்கடன்களை முடித்தபின்,
சோதிடர்கள் குறித்த நல்லவேளை வருவதற்குமுன்னாகவே,
விதிப்படிச்செய்யும் மணக்கோலங் கொள்வதற்காகப், பூணூல்
அசைந்து விளங்கும் மார்பினையும் நுணுகிய கேள்வியையுமுடைய
மேலோராகிய நம்பியாரூரர் மணிமாலையும் மலர்மாலையும் விளங்கத்
திருமஞ்சனசாலையிற் புகுந்தார்.
(வி-ரை.)
காலை செய்வினைகள் - காலையில் எழுந்ததும்
செய்யக்கடவனவாகிய நித்திய கடமைகள். செய்வினை -
செய்யக்கடவனவாம் வினை.
கணிதநூற்
புலவர் - சோதிடர். காலங்கணித்து நன்னாளும்
நல்வேளையும் நிச்சயிப்பவர். வேளை - பொழுது. இங்கு, குறித்த
நல்வேளை என்க.
விதிமணம்
- இயற்கை மணத்தினின்றும் வேறாதலின்
விதிமணம் என்றார். நூல்களில் விதித்த சடங்குகளுடன்
பெற்றோர்களாற் றரப்பெற்றுச் செய்யும் மணம். (இயற்கை மணம் -
தலைவன் தலைவியர் தாமே கொள்வது). மணக்கோலம் -
மணமகனுக்குரிய மணக்கோலம். நூல் அசைந்து இலங்கு மார்பு -
நுல் அசைவதாலும் பிற அரச அணிகளாலும் விளங்கும் மார்பு.
நுணங்கிய கேள்வி மேலோன் -மிக நுணுகிய பொருள்களிலும்
கேள்வியினால் மேம்பட்டவர். மார்பு - மேனி வனப்பும், கேள்வி -
அறிவின் வனப்பும் குறித்து நின்றன.
மாலை
- தார் - மணிமாலை. மலர்மாலை - மாலை
விகற்பங்கள் என்பதுமாம்.
மார்பன்
நுணங்கிய - என்பதும் பாடம். 14
|