179.
|
வந்துதிரு
மாமறை மணத்தொழி றொடங்கும் |
|
|
பந்தரிடை
நம்பியெதிர் பன்னுசபை முன்னின்
றிந்தமொழி கேண்மினெதிர் யாவர்களு
மென்றான்
முந்தைமறை யாயிர மொழிந்ததிரு வாயான். |
33 |
(இ-ள்.)
வந்து...நின்று - (அவ்வாறு எய்தி) வந்து மணந்
தொடங்கும் பந்தரிலே நம்பியாரூரர் எதிரிலே சபையின் முன்னர்
நின்றுகொண்டு; முந்தை...வாயான் - பழமையாகிய அளவில்லாத
வேதங்களைச் சொல்லிய வாயினையுடைய சிவபெருமான்;
இந்த...என்றான் - யாவர்களும் யான் சொல்லப்போகிற இந்த
மொழிகளைக் கேளுங்கள்! என்று சொன்னார்.
(வி-ரை.)
எய்த - சழங்க - (29) - தாழ - நுடங்க - விளங்க
- (30) - கூர - கொள்ள - கொள்ள - (31) - எய்தி - (32) - வந்து
- நின்று - வாயான் என்றான் (33) என முடிவு செய்க.
திருமாமறை மணத்தொழில்
- வேத மந்திரங்களுடன்
ஆகம விதிப்படி செய்யும் கலியாண முயற்சிகள். வரிசை 173-ல்
மணத்திறம் என்றதும் இது.
தொடங்கும் பந்தர் - எனவே தொடங்கினார்களே
யன்றி
இதுவரைச் சடங்குகள் ஒன்றும் செய்யப்பெறவில்லை என்பதாம்.
மறை ஆயிரம் - அனந்த வேதம் - அநந்தாவை
வேதா:
என்ப பிரமாணம். ஆயிரம் - அளவிலாத - எண்ணிலாத - எனும்
பொருளில் வந்தது. எண்ணுப் பெயரல்ல. ஆயிரந் தாமரை போலும்
ஆயிரஞ் சேவடி யானும்....என்பனவாதி திருவாக்குக்கள் காண்க.
முந்தை மறை
- வேதம் நாத உருவுடையதாதலின்
முதன்மையுடையதாம். வரிசை 177-ல் பழைமை என்ற இடத்துக்
காண்க.
எதிர் - எதிரிலே. வரிசை 183-ம் பாட்டிலே
பின்னர்
இந்நாவனகர் ஊரன் என்று சுட்டுகின்றதும் காண்க.
நம்பி எதிர் - நம்பிக்கு
எதிராக - நம்பிக்கு மாறாக.
எதிர்மொழி என்பது உங்கள் கருத்துக்கெல்லாம் மாறாய் உள்ளது
இந்த மொழி என்று குறிப்பிட்டதுமாம். 33
|
|
|
|