182.
|
நெற்றிவிழி
யான்மொழிய நின்றநிகரில்லான்
|
|
|
‘உற்றதொர்
வழக்கெனிடை நீயுடை துண்டேன்
மற்றது முடித்தலதி யான்வதுவை செய்யேன்;
முற்றவிது சொல்லு'கென வெல்லைமுடி வில்லான். |
36 |
(இ-ள்.)
நெற்றி.......இல்லான் - நெற்றிக் கண்ணை மறைத்து
வந்த வேதியர் இவ்வாறு சொல்ல ஒப்பற்ற பெருந்தகையாம்
நம்பி அவரை நோக்கி; ‘உற்ற தொர்......சொல்லுக' என -
‘என்னிடத்துப் பொருந்தியதொரு வழக்கு உனக்கு உண்டானால்
அதனை முடித்தபின் பல்லாமல் நான் மணஞ்செய்ய மாட்டேன்;
ஆதலின் இதனை முடிவுபெறச் சொல்லுக' என்று சொல்ல; எல்லை
முடிவில்லான - அளவும் முடிவுமில்லாத அவ்விறைவன்.
(வி-ரை.)
நெற்றி விழியான் - நெற்றிக்கண்ணுடைய
சிவபெருமான். கண்ணுதல். இப்போது அதனை விழிக்காமல் வந்தவன் -
விழியாதவன் - என்ற எதிர்மறைக்குறிப்பும் காண்க. கண்ணிடை
கரந்த என வரிசை 175 பாட்டிற் கூறியதும் காண்க.
வதுவை -
மணம்; கலியாணம்.
முற்றஇது சொல்லுக
- வழக்கு முடித்தலது வதுவை
செய்யேன் ஆதலின் தொடங்கிய இது (இவ்வதுவை)
முற்றுப்பெறும்படி சொல்க. உன் வழக்கு வெற்றியாய் முற்றுமாறும்
என் அடிமை முற்றுமாறும் என்ற குறிப்பும் காண்க.
நிகர் இல்லான்
- தமக்கு ஒப்பார் ஒருவருமில்லாதவர்.
இப்புராண காவியத்தலைவராதலும், ஒப்பாரும் மிக்காரும்
இல்லாதவரே காவியத் தலைவராதற்குரியார் ஆதலும் குறிப்பாம்.
இவ்வாறு வல்வழக்கிட்டு ஆட்கொள்ளப் பெற்றமையாலும்
தோழராயினமையாலும் பிறவாற்றாலும் தமக்கு ஒருவரும்
ஒப்பில்லாதவராயினர்.
எல்லை முடிபு இல்லான்
- ஆதியந்த மில்லாதவர்;
அளவைகளைக் கடந்தவர்; எதனாலும் அளக்கலாகாதவர்.
முன்னைப்
பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
-
திருவாசகம். |
|
இன்னவுரு
வின்னநீற மென்றுணர்வ தேலரிது
- தேவாரம் |
முதலிய பிரமாணங்கள் காண்க.
36
|
|
|
|