113.
|
பழிப்பறை
முழக்கோ? வார்க்கும் பாவத்தி
னொலியோ?
வேந்தன் |
|
|
வழித்திரு
மைந்த னாவி கொளவரு மறலி யூர்திக்
கழுத்தணி மணியி னார்ப்போ? வென்னத்தன்
கடைமுன்
கேளாத்
தெழித்தெழு மோசை மன்னன் செவிப்புலம் புக்க
போது. |
28 |
(இ-ள்.)
பழிப்பறை...என்ன பழியினது பறைமுழக்கமோ?
கட்டுமியல் புடைய பாவத்தின் சத்தமோ? அரசனது மரபுக்கு ஒரு
மைந்தனாகிய அரசிளங்குமரன் உயிரைக் கைக்கொள்ள வருகின்ற
இயமனுடைய ஊர்தியாகிய எருமைக் கடாவின் கழுத்தில் அணிந்த
மணியின் பெருஞ் சத்தமோ? என்று கருதும்படி; தன்..போது - தனது
கடை வாயிலிலே இதற்கு முன் கேட்கப் பெறாத, ஆர்த்து எழுகின்ற
மணி ஓசையானது மன்னனது செவிப் புலத்திற் புகுந்தபோது;
(வி-ரை.)
கடைமுன்கேளா - ஓசை - முழக்கோ ஒலியோ -
ஆர்ப்போ - என்ன (ஐயுறும்படி) செவிப்புலம்புக்கபோது.
பழிப்பறை முழக்கோ - பழி + பறை -
பழி சாற்றும் பறை
முழக்கமோ பழிப்பு + அறை எனக் கொண்டு பழிப்பாகிய ஒரு
பொருள் தான் இருப்பதை எடுத்துச் சொல்கின்ற சத்தமோ -
என்றலுமாம்.
ஆர்க்கும்
பாபம் - உயிர்களைக் கட்டும் இயல்பினை உடைய
பாவம். “ஆர்த்த பிறவித் துயர்கெட“ என்பது திருவாசகம்.
வேந்தன் வழித் திருமைந்தன் - அரசனது
வழித்தோன்றலாய் வந்த சிறந்த மகன்.
மணியின் ஆர்ப்போ் - “யானைவரும்
பின்னே
மணியோசைவரும் முன்னே“ என்றபடி, மணியின் ஆர்ப்பு
-
பின்னே வருகின்ற அந்த ஓசையினையுடைய மணி கட்டிய
ஊர்தியையும், அது (ஊர்தி) தன்னை ஊர்ந்து வருகின்ற மறலியையும்,
அவன் மைந்தனாவிகொளவருதலையும், முறையே குறிக்க நின்று
ஐயத்தை விளைத்ததாம். இதற்குமுன் கேட்ட ஓசைகள்யாவும்
அறவோசைகள். இது முன்கேளா ஓசை யாதலின் அறத்திற்கு
மாறான மற ஓசையேயாம். ஆதலின் மறம் பழியோ? பாவமோ?
மறலி வருகையோ? இவற்றுள் யாதாய் விளைவதோ? என்ற ஐயம்
தந்தது. என்ன - என்று ஐயுற்று எண்ண.
கடை -
முன்வாயில். “புறங்கடை நல்லிசையும் நாட்டும்“
என்பது காண்க.
முன்கேளா - இதற்குமுன் கேட்டிராத. இதற்குமுன்
அநீதி
எதுவும் நடவாததால், அது பற்றி எழும் மணி ஓசையும்
கேளாதாயிற்று. “தூங்கிய மணி“ என்று பின்னரும் கூறுதல் காண்க.
தெழித்து எழும் ஓசை
- ஓசை - அர்த்த மில்லாத சத்தம்.
மணி ஓசை அர்த்தமற்ற சத்தமேயாயினும் இங்கு மேலே சொன்ன
ஐயங்களை விளைத்ததனால் அர்த்தமுள்ள சத்தமாயிற்று என்பார்
தெழித்து எழும் ஓசை என்றார். தெழித்தெழுதல்
- பேரோசையாய்
அதட்டி எழுதல், உணர்த்துதல்.
செவிப்புலம் புக்கபோது - இங்குப் புலம்
என்றதும்
பொறியை உணர்த்திற்று. செவிக்குரிய புலனாகிய சத்தம் அதன்
பொறியில் புகுந்தபோது. மணி ஓசை முதலிலே செவிப்பொறியிற்
புகுந்து - பின்னர் அதன் காரணத்தை உசாவியறியும் மனமாகிய
அந்தக்கரணத்தைக் கலக்கிக் - குறித்த ஐயங்களை விளைத்தது
என்பார் செவிப் புலம் புக்கபோது முழக்கோ - ஒலியோ -
ஆர்ப்போ - என்ன என்றார். புக்கபோது -
அது கேட்ட என
மேல் வரும்பாட்டுடன் கூட்டிமுடிக்க.
பழி - மிகவே பாவம் மிகும் - பாவம் மிகவே
இயமதண்டனைவிளையும் - என்று பழிப்பறை முழக்கோ -
பாவத்தின் ஒலியோ - மறலி ஊர்தி மணி ஆர்ப்போ - என
இம்முறையில் வைத்து ஒதினார். அன்றியும் இம்மையில் பாவங்
காரணமாகப் பழி விளைந்து இயம தண்டனையில் முடிவுறும்.
ஆதலின் - ஏனையிரண்டுக்கும் காரணமாகிய பாவத்தை நடுவில்
வைத்தார் என்றலுமாம். பாவம் வெளித்தோன்றாத மூலகாரணமும்,
பழியும், இயமதண்டனையும் அதன் விளைவாகித் தோற்றப்படும்
காரியமுமாம்.
மணி புடைக்கப்படும் போது இருபுறமும் தனித்தனி இரண்டு
ஓசைகிளம்ப, எதிரோசையுடன் மூன்றாகும் எனவும், இவையே இங்கு
இம்மூன்றாகக் கூறப்பெற்றன எனவும், இவ்வாறெல்லாம் அணிந்து
கூறும் உரைகள் பாட்டின் ஆதரவில்லாத அணிந்துரைகளேயாம்
என்க.
முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானது திருக்கோயில்
வாயிலிலும் ஒரு மணி கட்டி யிருந்ததெனவும், திரிபுராதிகளின்
கொடுமைக்காற்றாத தேவர்கள் அதனை அடிக்கவே அதன் ஓசை
மாறும் முன்னரே திரிபுரங்கள் தீப்பட்டுச் சாம்பராயின - எனவும்
அப்பர் பெருமான் இறைவனது கருணைப் பெருக்கை விளக்கும்படி
மிகச் சுவை பெறுமாறு அருளியிருத்தல் இங்கே நினைவு
கூர்தற்பாலதாம்.
“மூவா
வுருவத்து முக்கண் முதல்வமீக் கூரிடும்பை
சாவா யெனக்கடை தூங்கு மணியைக்கை யாலமரர்
நாவா யசைத்த வொலி, யொலி மாறிய தில்லையப்பாற்
றீயா யெரிந்து பொடியாய்க் கழிந்த திரிபுரமே“
- தனித்திருவித்தம் |
என்பது அவர் திருவாக்கு.
முறை யறிவித்தமையால் இங்கு
மணியோசையை ஒலி யென்றமை காண்க. இதுபோலவே இங்கும்
காவலனும் ஓசை கேட்டதும் முறை செய்தான் - கன்றும் எழுந்தது
- பசுவின் துயரமும் நீங்கியது - என்பதும் காண்க. 28
|
|
|
|