| 255. 
           | 
          ஆடுகின் 
            றவர்பே ரருளினா னிகழ்ந்த 
                 வப்பணி சென்னிமேற் கொண்டு | 
            | 
         
         
          |   | 
          சூடுதங் 
            கரங்க ளஞ்சலி கொண்டு 
                 தொழுந்தொறும் புறவிடை கொண்டு 
            மாடுபே ரொளியின் வளருமம் பலத்தை 
                 வலங்கொண்டு வணங்கினர் போந்து 
            நீடுவான் பணிய வுயர்ந்தபொன் வரைபோ 
                 னிலையெழு கோபுரங் கடந்து,  | 
          109 | 
         
       
          
       
            (இ-ள்.) 
      ஆடுகின்றவர்......மேற்கொண்டு - கூத்தர் பெருங்  
      கருணையினாலே உண்டாகிய அந்தக் கட்டளையைத் தலைமேற்  
      கொண்டவராய்; சூடு........கொண்டு - தமது கைகளைச் சிரத்திற்கூப்பி  
      வணங்கிக்கொண்டு; தொழும்.......விடைகொண்டு - தொழுது  
      விடைபெற்றக்கொண்டு; மாடு.......வலங்கொண்டு - செய்கின்ற  
      பேரொளியுடைய வளர்கின்ற திருச்சிற்றம்பலத்தை வலஞ்செய்து;  
      வணங்கினர் போந்து - வணங்கிப் புறம்போந்து; நீடு....கடந்து -  
      நீண்ட வானமும் சுருங்கியதாக உயர்ந்த பொன்மலைபோல  
      நிலையினின்றும் எழுந்த தெற்குக் கோபுரத்தைக் கடந்து,  
       
           (வி-ரை.) 
      அப்பணி - ‘ஆரூரில் வருக நம்பால்' என்ற அந்தக் 
       
      கட்டளை. சென்னிமேற்கொண்டு - மிக உயர்ந்த பொருளாதலின்  
      தலையின்மேல் கொண்டார். 
       
           தொழுந்தொறும் 
      - முன்னே உட்புகும்போது தொழுது  
      தொழுது சென்ற இடங்களாகிய திருக்களிற்றுப்படி, திருவணுக்கன்  
      திருவாயில், திருவாயில் முதலியவற்றை உள்ளேயிருந்து திரும்பி  
      வரும்போது இம்முறையே தனித் தனித் தொழுது தொழுது வருதலால்  
      தொழுந்தொறும் என்றார். அங்கங்கும் விடைபெற்றுக் கடந்தார். 
       
           புறவிடை 
      - புறத்தே செல்ல விடை. பின்றிரும்பிச்சென்று  
      விடைகொண்டு என்ற கருத்துமாம். பிந்திப் பிந்தி விண்ணெறி  
      முன்னுகின்றான் - பின்றிரும் பிச் சென்றான் என்ற  
      தணிகைப்புராணம் நந்தியுபதேசப் படலம் 144 - 145 காண்க. 
       
           மாடு பேரொளியின் வளரும் 
      அம்பலம் - மாடு -  
      செய்கின்ற - நிலவ வைக்கின்ற. பேரொளியின் மாடு அம்பலம்  
      என்று மாற்றுக. செய்யும் பேரொளி. மாடுதல் - செய்தல் என்ற  
      பொருளில் முன் வழங்கியதொரு சொல். உலகத்துக்குப் பேரொளி  
      செய்கின்ற - உலகத்தைப் பேரொளியின் வைக்கின்ற என்க. இது  
      இப்பொருளில் வழக்காறு அருகியது. தமிழிலிருந்து போந்து இச்சொல்  
      இப்பொருளில் கன்னட மொழியில் வழங்குகிறது. 
       
       
      
         
          ஏடுமலி 
            கொன்றைவளரிந்துவொடு வன்னி 
            மாடவல செஞ்சடையெம் மைந்தனிட மென்பர் 
               - திருநள்ளாறு - (திருவிராகம் 
            - இத்தளம்) 1 | 
         
       
       
      என்ற திருஞானசம்பந்த 
      சுவாமிகள் தேவாரம் காண்க. மாடு  
      என்பதைப் பெயர்ச் சொல்லாகக் கொண்டு பொன் என்றும், பக்கம்  
      என்றும் கூறுவாருமுண்டு. 
       
           வணங்கினர் போந்து 
      - வணங்கிச் சென்று. வணங்கினர் -  
      முற்றெச்சம். வணங்கி. 
       
           வான்பணிய 
      - உயர்ச்சிபெற்ற ஆகாயமும் இதிற்றாழும்படி -  
      அதாவது மிகவும் உயர்ந்த. உயர்வு சிறப்பு உம்மைதொக்கது. வான் -  
      தேவர்கள் - தேவவுலகம் என்று கொண்டு 
      அவர்கள் பணிய  
      என்றுரைப்பினுமாம். பணிய - பணியும்பொருட்டு எனக்கொண்டு  
      பணிய எழும் என்று கூட்டி யுரைத்தலுமாம். 
       
           பொன்வரைபோல் - 
      கோபுரத்தின் சிகரங்களிலே  
      பொற்பூச்சிட்டு உயர்ந்து விளங்குதல் குறிப்பாம். 
       
           நிலைஎழு கோபுரம் - 
      வான் பணியுமாறு தன்நிலையிலே  
      நின்று எழுந்ததாகிய உட்கோபுரம். எழுநிலை என்று மாற்றி எழு  
      நிலை (வாயில்)களையுடைய எனவுரைப்பதுமாம். 109 
   |  
	 
	 |   
				
				 | 
				 
			 
			 |