266. மாளிகைகண் மண்டபங்கண் மருங்குபெருங்
                          கொடிநெருங்கத்
 
  தாளினெடுந் தோரணமுந் தழைக்கமுகுங்
                          குழைத்தொடையு
நீளிலைய கதலிகளு நிறைந்தபசும் பொற்றசும்பும்
ஒளிநெடு மணிவிளக்கு முயர்வாயி
                          றொறுநிரைத்தார்.
120

     (இ-ள்.) (அங்ஙனம் முற்பட்ட அவர்கள்) மாளிகைகள் ...
நெருங்க - மாளிகைகளிலும் மண்டபங்களிலும் நீண்டு உயர்ந்த
கொடிகளை மேற்பக்கத்திலே நெருங்கும்படி அமைத்து; தாளின் ...
நிரைத்தார் - அடிப்பக்கத்திலே நீண்ட தோரணங்களையும்
(காய்க்குப் பயன்படாதனவாய்) இலைகளடர்ந்த கமுகு வகைகளையும்
தழைகளாற் றொடுக்கப்பட்ட மாலைகளையும் நீண்ட
இலைகளையுடைய வாழை மரங்களையும் நீர் நிறைந்த பசும்பொற்
கலசங்களையும் வரிசைப்பட வைத்த மணிகளாலாகிய
விளக்குகளையும் ஓங்கிய வாயில்கள் எங்கும் ஒழுங்குபெற
வரிசையாய் அமைத்தார்கள்.

     (வி-ரை.) எழுந்த அவர்கள் என்ற எழுவாய்
மேற்பாட்டிலிருந்து வருவிக்க.

     மாளிகைகள் - தனி யிருப்புக்கள்; மண்டபங்கள் பொது
இருக்கைகள்.

     தாளின் - அடிப்பக்கத்திலே, தாளின் என்றதனாற் கொடிகள்
மேற் பக்கத்தே நெருங்கின என்க. மெய்ப்பொருள் - புரா - 8
பாட்டுப் பார்க்க. தாளின் - கால்கள் நாட்டி அவற்றிலே என்பாரு
முண்டு.

     தழைக் கமுகும் - காய்க்காகவன்றி அலங்காரத்திற் கென்றே
செறிவாய்ப் பயிராக்கப் பெற்று இலைகள் அடர்ந்து வளர்ந்த கமுகு.
கமுகுத் தழையும
- என மாற்றி உரைத்தலுமாம்.

     குழைத் தொடை - குழை - மாவிலை முதலியன.
இலைகளைக் கொண்டு தொடுத்த மாலைகள். பலவகை
மாலைகளையும் அளவாய் அறுத்துத் தொங்க வைத்தல் அலங்கார
வகைகளில் ஒன்று. “பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை,
துணையுற அறுத்துத் தூங்க நாற்றி“ என்ற திருமுருகாற்றுப்படை
காண்க.

     ஒளி - வரிசை. ஒளி என்பது எதுகை நோக்கி முதல் நீண்டு
வந்தது என்று உரைத்தலுமாம். இரத்தினங்கள் பதித்த தீபங்கள்
என்றும், ஒரு முழுமாணிக்கத்தாற் செய்யப்பட்ட விளக்கு என்றும்
கூறுவர் மகாலிங்கையர். “சேடு கொண்டவொளி தேர்நிரை தோறும்“
(வரிசை-247) என்றதும் காண்க.

     உயர் வாயில் - வாயில்கள் - நன்மை உட்புக விடுக்கவும்,
தீமை உட்புகாமல் தடுக்கவும் உதவும் உயர்வுடைய வாயில், ஓங்கிய
பெரிய வாயில்கள் என்றுரைத்தலுமாம்.

“............................................................... பெரியோர் உள்ளம்
                                        போல
ஓங்குநிலைத் தன்மையவாய், அகில முய்ய வுமைபாக ரருல்
                           சய்த வொழுக்க மல்லாற்
றீங்குநெறி யடையாத தடையு மாகி ......“
                        - திருக்குறிப்பு - புரா - 88

நிரைத்தார் - வரிசைப்பட அமைத்தார்கள். 120